Monday, March 29, 2010

அங்காடித்தெரு


அங்காடித்தெரு





வசந்த பலன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மற்றுமொரு குறிஞ்சியாய்

ஜெயமோகன் வசனத்தில் மற்றுமொரு யதார்த்த பாத்திர படைப்பு நிறைந்த
கவிதையாய்

புதுமுக அறிமுகத்தில் உண்மைகளை யாரும் சிந்திக்காத ,நினைத்தும் பார்க்காத மனிதர்களின் மறு பக்கத்தை வலியை சொல்லிய காரணத்திற்கு இயக்குனர் வசந்த பலனை நிச்சயம் பாராட்ட வேண்டும் ,
விவசாயம் பொய்த்து போன தென் மாவட்டங்களில் இருந்து பஞ்சம் பிழைக்க வரும் ஆண் பெண் இளைஞர்கள்,விற்பனை மனிதர்களாக அவர்களின் கதையை உண்மைக்கு வெகு அருகில் சென்று படம் பிடித்து ,
ulaippu சுரண்டல் பேர்வழிகளின் தோலுரித்து சமூக பொறுப்புள்ளசினிமாவை தரும் பாங்கு பாராட்டுதலுக்கு உரியது ,


தினம் தினம் மக்களால் நிரம்பி, பிதுங்கி வழியும் சென்னை மாநகர் கடை வீதிகளில் ,பிரம்மாண்டமாய் தென்படும் துணிக்கடைகள் ,அதில் வேலை பார்க்கும் மனிதர்கள் ,அவசரங்கள் ,சுரண்டல்கள் ,மனித உரிமை மீறல்கள் வேலை பார்க்கும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் ,அந்த உணவு கூடம் ,தூங்கும் பெரிய ஹால் ,களைப்பில் தூக்க வெறியில் குவியல் குவியலாய் தூங்கும் இளைஞர்கள் ,அவலங்களை ,சாடி ஒரு படம் (பாடம் ),வந்திருப்பது பார்க்கும் அனைவரையும் நிச்சயம் யோசிக்க வைக்கும் ,


கடை முதலாளிகள் ,இன்னம் பிற நிறுவன முதலாளிகள் மனசாட்ச்சியை பதறி உலுக்குவது நிச்சயம் ,

தொழிலாளர்கள் நலன் ,பாதுகாப்பு ,மனித உரிமைகள் ,

இவை யாவும் பேசப்படும் ,

இனியாவது நிறைய மாறுதல்களை கடை ,நிறுவனங்களில் வேலை பார்ப்போரிடமும் ,வேலை வாங்குவோரிடமும் ஏற்படுத்தும் .


சொல்லபடாத சங்கதிகள் ,அறியபடாத மனிதர்கள் ,அவர்கள் வாழ்வியல் ,அழகியல் ,அவலங்கள் ,ஆனந்தங்கள் என அனைத்தையும் படம் பிடித்த சமூக கருத்துகளை ,அவலங்களை தலையில் கொட்டி புரிய வைக்க வந்திருக்கும் இந்த படம் நிச்சயம் கொண்டாட பட வேண்டிய படம்