Wednesday, February 24, 2010

மீண்டும் பறக்கவே ஆசை எமக்கு

தோல்விகள் புதிதல்ல நமக்கும் நம்மை போன்றவர்க்கும்
மீண்டு வருவதும் ,எழுந்து நடப்பதும் ,உயித்தெழுவதும் ,அடிக்கடி நடக்கும் சாதரண நிகழ்வுகள்
போராட்டமே வாழ்க்கை ஆனபிறகு போராடுவதே ஆனந்தம் ,அந்தமும் கூட
போராட்டம், தோல்விகள், ஏமாற்றங்கள் இல்லாமல் நாங்களில்லை .....நாட்களும் நகருவதாயில்லை
விழுவோம் எழுவோம் பறப்போம் இளைப்பருவோம் ..........மீண்டும் தொடரும் முடிவதில்லை
தொடரவே விருப்பம் எங்களுக்கு ...............................

Tuesday, February 9, 2010

தமிழ் சினிமா கடந்த பத்தாண்டுகளில் -ஒரு மீள் பார்வை

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமா நிறையா மாறுதல்களை சந்தித்து உள்ளது ,கிட்டத்தட்ட வருடத்தில் ஐம்பது படங்கள் என்றால் கூட அறுநூறு படங்கள் வெளிவந்துள்ள நிலையில் எந்த படங்கள் வெற்றிகரமாக ஓடியது ? எந்த படங்கள் திட்டரை விட்டு ஓடியது ?ஏன் ஓடியது ?என்பதற்கான வினான்க்களும் அதற்கான விடைகளுமாக சாதாரண ரசிகன் என்கிற முறையில் எழுதப்படும் எழுத்து இந்த வலைபதிவு .காரணங்களை பாரபட்சம் பார்க்காமல் கத்தி முனையில் நின்று விமர்சனங்களை எதிர்கொள்ள ,எழுத கடமைபட்டுள்ள காரணத்தால் இதனை எழுதுகிறேன்.ஏம்ப்ப இந்த வேண்டாத வேலை உனக்கு என்றால் .நண்பர்கள் இதற்கு முந்தைய வலைபதிவுகளுக்கு கொடுத்த ஆதரவும் ,ஆலோசனைகளும் ,வாழ்த்துகளும்

Monday, February 1, 2010

தமிழ் படம் -இந்த படத்த பாத்துட்டவது திருந்துவானுன்களா ??






அன்னைக்கி பவர் கட்டு நம்ம ஊர்ல ,
சரின்னு திட்டேர் பக்கம் போன முதல் முதல் காட்சியை நியாயமான விலை கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தேன் .

தமிழ் படம்

இந்த படத்த பாத்துட்டவது திருந்துவானுன்களா ??

அரைச்ச மாவை அரைப்பதும்

கரைச்ச புளியை கரைப்பதும்

தொடரும் இன்றைய தமிழ் சினிமா சூழலில்

ஹீரோயசத்தை ,காதல் காட்சிகள் ,பஞ்சு டைலாக்கை ,
வழக்கமான ரசிகன் யூகிக்க கூடிய கதை அம்சத்தை ,
குத்துபாட்டு ,நம்ப முடியாத சண்டை காட்சிகள்
அதுவும் ரஜினி ,கமல் ,விஜய், தல ,வால்,
என்று யாரையும் விட்டு வைக்காமல் கிழி கிழி என்று கிழித்திருப்பது படத்தின் பலம் ,

தளபதி வரிசை நாயகர்கள் இனிமேல் பன்ச் டைலாக் பேச இனி பயப்படுவாணுக ஏன்ன அந்த அளவுக்கு பன்ச் டைலாக் இந்த படத்தில் பஞ்சராக்க பட்டிருக்கிறது .



உண்மையில் வித்தியாசமான படம் ,

ஹீரோ இன்ட்ரோ காட்சியில் பான்ட் கிழிந்து ஜட்டி தெரிய நிற்கும் காட்சி ,

ஆண் பிள்ளைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் காட்சி ,

வில்லி ஆண் இளைஞனை கற்பழிக்க முயலும் காட்சி ,

முதன் முறையாக ஹீரோஇனி சண்டையை பார்த்து காதல் கொள்ளும் ஹீரோ ,

ஒரு ஆங்கில குடும்ப பாடல் கேட்டு குடும்பம் ஒன்றாக சேரும் காட்சி ,

என்று நிறைய மாற்று காட்சிகள் கைதட்டல்கள் ,சிரிப்பு சப்தங்களால் ,

திரை அரங்கம் நிரம்பி வழிகிறது ,



குறிப்பிட்ட ரசிகன் என்றில்லாமல் அனைவராலும் இந்த படம் ரசிக்க வைக்கிறது ,

முன்னணி
ஹீரோக்கள் ,இயக்குனர்கள் ,பாடல் ஆசிரியர்கள் ,என அனைவரையும் மரியாதையாக திட்டியிருப்பது தெளிவாக புரியும் .

திருந்துகய்ய
,ஒட்டுமொத்த இயக்குனர்களும் ,முன்னணி ஹீரோக்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்,,,


அதுவும் ஒரே பாடலில் காபி வருவதற்கும் ஹீரோ கஷ்டப்பட்டு ,கோடீஸ்வரன் ஆகும் காட்சி நல்ல செருப்படி ,இனிமேல் ஒரே பாடலில் உழைத்து முன்னேறுவது போல காட்ட யோசிப்பார்கள் கண்டிப்பாக .

விளங்காத வார்த்தைகள் கொண்ட அந்த தமிழ் பாடல் ஓமக சீய ,, தியட்டரில் கைதட்டல், அடிக்கடி கேட்ட பாடல் இதுவாக இருக்கும் ,ஹீரோ நல்ல நடிப்பு ,நகைச்சுவை ,நன்றாக செய்திருக்கிறார் .நல்ல தேர்வு ,அனைவரும் தங்கள் பங்களிப்பை நன்றாக செய்திருக்கிறார்கள் ,பறவை முனியம்மா தூள் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒளிர்கிறார் .

இயக்குனர் அமுதன் ,தயாரிப்பாளர் அழகிரி தைரியமாக இப்படி ஒரு சவுக்கடி தமிழ் படங்களின் மீது வீசியிருப்பது உண்மையில் பாராட்டுக்கு உரியது .
.இரண்டாம் பாதியை ஜவ்வாய் இழுத்திருக்க வேண்டாம் ,சிறுவர்கள் ரசிப்பார்கள் ,

மொத்தத்தில் இந்த படத்தின் வெற்றி சிரிபொலி ,கைதட்டல்கள் ,நிரம்பி வழியும் இளைஞர் கூட்டம் ,இவை தான்