Tuesday, September 29, 2009

சினிமா சினிமா



அழகி ,ஆட்டோகிராப் ,வெயில் ,காதல் ,சுப்ரமணியபுரம் ,பூ ,பருத்திவீரன் ,வெண்ணிலா கபடி குழு ,பசங்க ,நாடோடிகள் ,

இவைதாம் நான் பார்க்க பரிந்துரைக்கப்பட்ட நல்ல படங்கள் ,செயற்கை தனம் இல்லாத சாதரண மனிதர்களை நிழலாக இல்லாமல் நிஜங்களாக பதிவு செய்யும்

இப்படங்கள் நிச்சயமா ஒரு மிகப்பெரிய சாதனை ,ரசிகர்களும் இதைதான் பெரிதும் விரும்பி கொண்டாடுகின்றனர்

மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுப்பிய படங்கள் ............கிராமத்து யதார்த்தமும்
உண்மையின் பிம்பமுமாக அசலாக வாழ்கையை வருடும் படங்கள் அமைவது தமிழ் சினிமாவின் நல்லகாலம் ....புதிய இயக்குனர்கள் ,புதிய முகங்கள் , தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பது சற்று ஆறுதலான விஷயம் ,கோடிகணக்கில் பணம் போட்டு தறுதலை தனமாக படம் எடுத்து தயாரிப்பாளர் கடன் பட்டு படம் ஓடாமல் வீணாகும் பணம் ,பல கோடி .நேர விரயம் ,(ரசிகனின் நேரமும் இதில் அடங்கும் )

பழைய படங்களில் வெற்றிகரமாக ஓடிய படங்களை மீண்டும் புதிதாக இளம் கதாநாயகர்களை வைத்து எடுத்தால் என்ன ???


ரத்தகண்ணீர் படம் சமீபமாக அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது MR ராதாவின் நடிப்பும் ,வசனங்களும் , சிரிப்பும் சிந்தனைக்கும் உரியவை .இந்தப்படத்தை மீண்டும் புதிய வார்ப்பில் வண்ணப்படமாக எடுத்தால் நிச்சயம் ஹிட்டாகும் .பில்லாவை போல ...............................

Friday, September 25, 2009

காட்டு பூ


காட்டு பூ தன் பாட்டுக்கு பூக்கிறது
மணம் சேர்க்கிறது
மாலைக்குள் சிக்காமல்
மயிருக்குள்
சிறைபடாமல்
மனிதகரங்களால் கரை படாமல்
பூக்கிறது
நிதமும்
வண்டுகளும்
பறவைகளும் தேனுண்ண
வண்ணத்து பூச்சிகளும் மட்டும் மகரந்த சேர்க்கை நடத்த
யாரும் எதிர்பார்ப்பதில்லை
யாரும் நீருற்றவில்லை
பறிக்க
யாருமில்லை ......................
போதிலும் நிதமும் பூக்கிறது......... பூத்து கொண்டே இருக்கிறது ...........................

ஊட்டி மலை ரயில் பயணம் நீளமாக ஒரு நீலமலைப் பயணம்

கடந்த ஜூன் மாதம் எனது வாடிக்கையாளர்களை சந்திக்க அடிக்கடி ஊட்டி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது .
ஊட்டி போகும் பொழுது கோயம்புத்தூரில் இருந்து பஸ்ஸில் சென்றால் மேட்டுபாளையம் குன்னூர் ,அப்புறம் ஊட்டி ,
செல்லும் வழியெங்கும் அடர்ந்த காடுகள் ,காடுகள் ,காடுகள் , இவ்வளவு அழகையும் பார்க்க கண்கள் இரண்டு போதாது என்பது உண்மைதான்
ஓங்கி உயர்ந்த மலை ,பாதளம் நீளும் மலை சரிவுகள் , கொண்டாய் ஊசி சாலை வளைவுகள் ,அபாய எச்சரிக்கை சாலை முகடுகள் ,வழி நெடுக இறைந்து கிடக்கும் பரவி உள்ள காடுகளை பார்க்கையில் தான் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது


உலகம் புவி வெப்பமாதல் நம்மை தாக்க இன்னும் காலம் உள்ளது என்று ..............

ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் ,உலக புகழ் வாய்ந்த பூங்காக்கள் ,

படகு இல்லம் ,குளிர் கற்று ,உணவு வகைகள் ,முக்கியமாக வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊட்டி மலை ரயில் பயணம் ......................................

இன்னும் நிறையா வரும்

இப்போது ஏற்காடு மலை வாசஸ்தலத்தில் இருந்து அழைப்பு வாடிக்கையாளர்கள் ஹோட்டல் வெப்சைட் பணிக்காக செல்கிறேன் ................

மீண்டும் வந்து இந்த பயண கட்டுரைகளை உள்ளது உள்ளபடி சொல்கிறேன் விரைவில்

ஈசா யோகா மையம் -உண்மையில் ஒரு காட்டுப் பூ

ஈசா யோகா மையம் -உண்மையில் ஒரு காட்டுப் பூ

இன்று அதிகாலை ரஜினியின் இமயமலை பாபா பற்றிய பயண விவாதம் நடந்து கொண்டிருந்தது . நேற்று இரவுதான் பாபா ,இமயமலை ,காட்டுவழி, மலைபயணம் குறித்த தொடர் விஜய் டிவி இல் ஒரு வாரமாக ஒளிபரப்பாகி இறுதியாக முடிவடைந்திருந்தது .

இமயமலை இருக்கட்டும் நமக்கு வெகு அருகில் இருக்கும் தென்கயிலை ,வெள்ளிங்கிரி மலை அடிவாரம் ,சத்குரு ஆசிரமம் ,ஈசா யோகமய்யம் ,தியானலிங்கம் போய் இருக்கிறீர்கள ? என்றார் ,நண்பர் அடிக்கடி ஈசா யோகமய்யம் சென்று அங்குள்ள தியனலிங்க மண்டபத்தினுள் அமர்ந்து சற்று தியானம் செய்து வருவது தெரியும் .

நமது நண்பரும் என்னை நீண்ட நாட்களாக ஈசா யோகா மய்யத்திற்கு வாருங்கள்
அங்குள்ள தியான லிங்கம் ,இயற்கை சூழல் ,மலை அடிவாரம் ,தூய்மையான காற்று
இவை பற்றி கூறி ஆசை மூடினார் .உடனே கிளம்பு .......

4D பஸ்ஸை காந்திபுரம் பேர்ந்து நிலையத்தில் பிடித்தோம் நல்லவேளை ஜன்னலோரமாக இருக்கை கிடைத்தது .

நிறையா பேர் ஈசா மையம் தான் வந்திருந்தார்கள் .

செல்வபுரம் பேரூர் தாண்டி வயல் வெளிகள் கிராம சாலைகளில் பயணம் ஆரம்பித்தது ... நகரத்தை தாண்டி தூரம் வந்திருந்தோம்

அழகான பாக்குமரங்களின் அணிவகுப்புகள் ,துள்ளியோடும் சிறு வாய்க்கால் ,ஓடைகள் ,
திராட்சை கொடிகள் ,வயல்களின் பயிர்களின் நடன அசைவுகள் ,சுத்தமான காற்று ,

அங்காங்கே
பேருந்து நிறுத்தம், கட்சிகொடிகள்,பெட்டிகடைகள் ,ஆரம்ப பள்ளிக்கூடங்கள் ,பள்ளி மைதான மாணவர்களின் விளையாட்டுகள் ,ஆடுமாடுகள் மேய்ச்சல் ,இவையெல்லாம் ஜன்னலோரம் அமர்ந்து ரசித்தபடி பயணம் தொடர்ந்தது ,

சுவாசிக்கும்
காற்றில் ஒரு கிராமிய மணம் கலந்திருத்தது ....

அழுக்கில்லாத காற்றையும் ,நீரையும் மனிதன் விலை கொடுத்து வாங்கி நுகரும் காலம் என்னை சற்று லேசாய் நெருடியது , ஓரிடத்தில் சுத்தமான பன்னீர் திராட்சை விற்பனைக்கு கொட்டி குவித்து வைத்திருந்தார்கள் ............

தூரத்தில் மலை தொடர்களும் பசுமையான மலை மடுக்களுமாக வெள்ளிங்கிரி மலைசாரல் தெரிந்தது வெள்ளிபனிமலை போல அங்கங்கே சிறு சிறு அருவி ஊற்றுகள் .....

இயற்கையின் மடியில் ஒவொருவரும் கைகுழந்தைகள் போல ஆர்வத்துடன் அழகை ரசித்தபடி ஈசா மையம் நோக்கிய பயணம் .................

முடிவாக பஸ் அந்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தி சென்றடைத்தது அங்கிருந்து ஒரு பூங்காவுக்குள் ,பண்ணை இல்லத்துக்குள் ,செல்வது போல
மண் சாலை இரு புறமும் கருவேல மரங்கள் மின் வேலிகள் ,வன பகுதி மிருகங்கள் எச்சரிக்கை ,,, அறிவிப்பு பலகைகள்

அமைதியும் பிரமிப்பும் எதிர்பார்ப்பும் மூன்றும் சேர ஒரு வித எதிர்பார்ப்புடன் அந்த மய்யத்தை அடைந்தோம் உள்ளே செல்ல செல்ல நிறையா ஆச்சர்யங்களும் ,பிரமிப்புகளும் ,வார்த்தைக்கு சிக்காத அனுவபமும் நமக்கு கிடைத்தன ,,,,,,,,,,,,,,,,

அது பற்றி அடுத்த இடுகையில் தொடரும் .............