Wednesday, December 30, 2009
பேசாத புகைப்படங்கள்என்னோடு பேசுவதாக உணர்கிறேன்
பெருபாலும் புகைப்படங்கள்
என்னை நிறைய சிந்திக்க , எழுத வைக்கின்றன ............
அவை என்னை கவிதை எழுத தூண்டுகிறது
அதன் வண்ணங்கள் என் எண்ணங்களை கிளப்பி விடுகின்றன .......
அவற்றிக்கு என்னாலான ஏதாவதொன்றை எழுதியே ஆக வேண்டும் என்கிற தீர்மானம் அவப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது ......
ஆகவே அடிக்கடி புகைப்படங்களை
பார்த்து கொண்டே என் ஓய்வு நேரங்களை கழிக்கிறேன் ,,,,,,,,,,,,,,,,
தனிமையில் அந்த பேசாத புகைப்படங்கள்
என் மௌனத்தை கலைப்பதாக உணர்கிறேன் .........
என்னோடு பேசுவதாக உணர்கிறேன் ...................................
என்னை நிறைய சிந்திக்க , எழுத வைக்கின்றன ............
அவை என்னை கவிதை எழுத தூண்டுகிறது
அதன் வண்ணங்கள் என் எண்ணங்களை கிளப்பி விடுகின்றன .......
அவற்றிக்கு என்னாலான ஏதாவதொன்றை எழுதியே ஆக வேண்டும் என்கிற தீர்மானம் அவப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது ......
ஆகவே அடிக்கடி புகைப்படங்களை
பார்த்து கொண்டே என் ஓய்வு நேரங்களை கழிக்கிறேன் ,,,,,,,,,,,,,,,,
தனிமையில் அந்த பேசாத புகைப்படங்கள்
என் மௌனத்தை கலைப்பதாக உணர்கிறேன் .........
என்னோடு பேசுவதாக உணர்கிறேன் ...................................
w3webmedia's second birthday 01-01-2010
வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை முடித்து முத்தான மூன்றாவது ஆண்டில் w3webmedia பயணிக்கிறது ,75 வாடிக்கையாளர்கள் ,25 மாணவர்கள் பயிற்சி ,
50 இளைங்கர்களுக்கும் மேலாக பணிவாய்ப்பு மற்றும் உதவிகள் ,வழிகாட்டி நிகழ்ச்சிகள் ,மொத்தத்தில் கடந்த ஆண்டு மிக சிறந்த ஆண்டு , நிறைய சவால்கள் ,ஏமாற்றங்கள் ,சாதனைகள் ,தனிப்பட்ட வெற்றிகள் ,குடும்பத்தில் நடந்தத நல்ல சுப காரியங்கள் ,நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் ,நீக்கல்கள் ,
புதிய நண்பர்களின் வருகைகள் ,எனது புதிய முயற்சிகளின் வரவேற்புகள் ,என்ன மொத்தத்தில் இந்த 2009 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்த்தது .
வரவேற்கிறேன் 2010 ஆம் ஆண்டை இன்னமும் நிறைய வெற்றிகளை ,மகிழ்ச்சிகளை ,புதிய அனுபவங்களை அள்ளித்தர வேண்டி
2010
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
50 இளைங்கர்களுக்கும் மேலாக பணிவாய்ப்பு மற்றும் உதவிகள் ,வழிகாட்டி நிகழ்ச்சிகள் ,மொத்தத்தில் கடந்த ஆண்டு மிக சிறந்த ஆண்டு , நிறைய சவால்கள் ,ஏமாற்றங்கள் ,சாதனைகள் ,தனிப்பட்ட வெற்றிகள் ,குடும்பத்தில் நடந்தத நல்ல சுப காரியங்கள் ,நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் ,நீக்கல்கள் ,
புதிய நண்பர்களின் வருகைகள் ,எனது புதிய முயற்சிகளின் வரவேற்புகள் ,என்ன மொத்தத்தில் இந்த 2009 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்த்தது .
வரவேற்கிறேன் 2010 ஆம் ஆண்டை இன்னமும் நிறைய வெற்றிகளை ,மகிழ்ச்சிகளை ,புதிய அனுபவங்களை அள்ளித்தர வேண்டி
2010
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
Monday, December 28, 2009
பள்ளியில் நான் நடித்த நாடகங்களை
பள்ளியில் நான் நடித்த நாடகங்களை மீண்டும் எனக்குள்ளாக அசைபோட வைத்தது அந்த நிகழ்வு ...
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் தொண்டு நிறுவனம் ஒன்று என்னை நடுவராக அழைத்திருந்தது ,
அன்று குழந்தைகள் தினவிழா .
நான்,கவிஞர் சூரிய நிலா ,சென்னை வருவாய் இணை ஆணையர் நந்தகுமார் IRS ,மற்றும் அலுவலர்கள் என நிறைய பேர் அந்த இரண்டுநாள் கலைவிழாவில் கலந்து கொண்டோம் ,
பிள்ளைகள் நடனம் ,பாட்டு,திருக்குறள் ஒப்புவித்தல் ,தனி நடனம் ,குழு நடனம் ,என மொத்தத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களும் குழந்தைகளாக மாறித்தான் போனோம் .
மனதில் அனைத்து கவலைகள் ,வேலை ,நாங்கள் யார் ? ,எங்கள் வயது ,என மொத்தமாய் மறந்து கவலைகள் ஏதுமின்றி அவர்களோடு உண்டு ,விளையாடி ,இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரை நன்றியோடு நினைவு கூர்கிறேன் .
குழந்தைகள் உலகம் மிகவும் விசித்திரமானது கவலை ,கடமை ,சூது ,வன்முறை ,பொறாமை , இவைகளுக்கெல்லாம் அர்த்தம் விளங்காத வயது .
நான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது திருப்பூர் கொடிகாத்த குமாரனாக ,நடித்தேன்.
காங்கிரஸ் குல்லா வேண்டும் என நான் அலைந்து திரிந்தது கடைசியில் ,பள்ளி சீருடை ஒன்றை வெட்டி தைத்து குல்லை ரெடி ஆனது .
திருப்பூர் குமரன் நாடகம் -நான் கொடி பிடித்து கோசம் போட்டு ,தொண்டர்களை வழிநடத்தி செல்லும் போது ஆங்கிலேய காவல்துறை அதிகாரி ஒருவருடன் நீண்ட விவாதம் முடிவில் எனக்கு தலையில் தடியடி.
கொடியை பிடித்தபடி கீழே விழவேண்டும் வெள்ளை சட்டை வெள்ளை வெட்டி ,வெள்ளை குல்லாய் ,மண்ணில் விழுந்தேன் .தேசிய கொடி விழாமல் ,கர கோசம் பட்டையை கிளப்பியது ,சுற்றிலும் தேயிலை தோட்டத்து தாய்மார்கள் ,தந்தைமார்கள் ,சிறுவர்கள் ,
1992 ஆகஸ்ட் மதம் 26 ம நாள் பள்ளியில் நடந்ததது .
அன்று புகைப்படம் எடுத்து வைத்து கொள்ள இயலவில்லை , அடுத்து பாரதியார் ,கட்டபொம்மன் ,மருது சகோதரர்கள் ,வீர சிவாஜி ,என பக்கம் பக்கமாக வசனம் பேசி கைதட்டல்கள் ,எல்லார்க்கும் என் முகம் ,என் பெயர் பிரபலம் ஆனது ,
கடையியாக நான் மேடையில் நடித்தது என்றால் கல்லூரியில் இன்றைய கல்வி திட்ட குறைபாடுகளை ,மனனம் செய்கின்ற யந்திரகளை மட்டுமே உருவாக்கும் கல்வி திட்டம் குறித்த் நாடகம் ,தந்தை வேடம் எனக்கு ,முடித்து விரைவாக கவியரங்கம் ஓடியதாக ஞாபகம் ....
அதன் பிறகு ஒரு குறும்படம் நடித்தேன் temting tragedy நண்பர்கள் வட்டம் அப்போது அதிகம் எப்போதுமே .நிறைய நாடகம் நடித்ததால் நடிக்கும் கலை கைவந்த கலையாகி போனது .
இன்னமும் நடிக்க ஆசை மேடையோ ,திரையோ கிடைத்தால் ஒரு கை பார்க்க ஆசை ,வாழ்க்கை மேடையில் நித்தம் நித்தம் நடித்து ,ஒப்பனை ,உடை ,கலைத்து உறங்கும் பொத்து ஒவ்வொருவரும் நல்ல கைதேர்ந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியுமா ??
ஆக
எல்லோரும் நடிகர்கள்
உலகமே நாடக மேடை --- சேக்ஸ்பியர்
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் தொண்டு நிறுவனம் ஒன்று என்னை நடுவராக அழைத்திருந்தது ,
அன்று குழந்தைகள் தினவிழா .
நான்,கவிஞர் சூரிய நிலா ,சென்னை வருவாய் இணை ஆணையர் நந்தகுமார் IRS ,மற்றும் அலுவலர்கள் என நிறைய பேர் அந்த இரண்டுநாள் கலைவிழாவில் கலந்து கொண்டோம் ,
பிள்ளைகள் நடனம் ,பாட்டு,திருக்குறள் ஒப்புவித்தல் ,தனி நடனம் ,குழு நடனம் ,என மொத்தத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களும் குழந்தைகளாக மாறித்தான் போனோம் .
மனதில் அனைத்து கவலைகள் ,வேலை ,நாங்கள் யார் ? ,எங்கள் வயது ,என மொத்தமாய் மறந்து கவலைகள் ஏதுமின்றி அவர்களோடு உண்டு ,விளையாடி ,இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரை நன்றியோடு நினைவு கூர்கிறேன் .
குழந்தைகள் உலகம் மிகவும் விசித்திரமானது கவலை ,கடமை ,சூது ,வன்முறை ,பொறாமை , இவைகளுக்கெல்லாம் அர்த்தம் விளங்காத வயது .
நான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது திருப்பூர் கொடிகாத்த குமாரனாக ,நடித்தேன்.
காங்கிரஸ் குல்லா வேண்டும் என நான் அலைந்து திரிந்தது கடைசியில் ,பள்ளி சீருடை ஒன்றை வெட்டி தைத்து குல்லை ரெடி ஆனது .
திருப்பூர் குமரன் நாடகம் -நான் கொடி பிடித்து கோசம் போட்டு ,தொண்டர்களை வழிநடத்தி செல்லும் போது ஆங்கிலேய காவல்துறை அதிகாரி ஒருவருடன் நீண்ட விவாதம் முடிவில் எனக்கு தலையில் தடியடி.
கொடியை பிடித்தபடி கீழே விழவேண்டும் வெள்ளை சட்டை வெள்ளை வெட்டி ,வெள்ளை குல்லாய் ,மண்ணில் விழுந்தேன் .தேசிய கொடி விழாமல் ,கர கோசம் பட்டையை கிளப்பியது ,சுற்றிலும் தேயிலை தோட்டத்து தாய்மார்கள் ,தந்தைமார்கள் ,சிறுவர்கள் ,
1992 ஆகஸ்ட் மதம் 26 ம நாள் பள்ளியில் நடந்ததது .
அன்று புகைப்படம் எடுத்து வைத்து கொள்ள இயலவில்லை , அடுத்து பாரதியார் ,கட்டபொம்மன் ,மருது சகோதரர்கள் ,வீர சிவாஜி ,என பக்கம் பக்கமாக வசனம் பேசி கைதட்டல்கள் ,எல்லார்க்கும் என் முகம் ,என் பெயர் பிரபலம் ஆனது ,
கடையியாக நான் மேடையில் நடித்தது என்றால் கல்லூரியில் இன்றைய கல்வி திட்ட குறைபாடுகளை ,மனனம் செய்கின்ற யந்திரகளை மட்டுமே உருவாக்கும் கல்வி திட்டம் குறித்த் நாடகம் ,தந்தை வேடம் எனக்கு ,முடித்து விரைவாக கவியரங்கம் ஓடியதாக ஞாபகம் ....
அதன் பிறகு ஒரு குறும்படம் நடித்தேன் temting tragedy நண்பர்கள் வட்டம் அப்போது அதிகம் எப்போதுமே .நிறைய நாடகம் நடித்ததால் நடிக்கும் கலை கைவந்த கலையாகி போனது .
இன்னமும் நடிக்க ஆசை மேடையோ ,திரையோ கிடைத்தால் ஒரு கை பார்க்க ஆசை ,வாழ்க்கை மேடையில் நித்தம் நித்தம் நடித்து ,ஒப்பனை ,உடை ,கலைத்து உறங்கும் பொத்து ஒவ்வொருவரும் நல்ல கைதேர்ந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியுமா ??
ஆக
எல்லோரும் நடிகர்கள்
உலகமே நாடக மேடை --- சேக்ஸ்பியர்
Tuesday, December 22, 2009
ரேணிகுண்டா-டப்பா ஹீரோவா ஜானி ஹீரோவா ??
ரேணிகுண்டா புது பொடியன்கள், புது நாயகன் ,புது நாயகி , ,புது முகங்கள் ,புது டைரக்டர் ,புது மியூசிக் ,என முற்றிலும் புதுமையான,துணிச்சலான கூட்டணி படைத்திருக்கும் ஒளி ஓவியம் ரேணிகுண்டா
தியட்டரில் யதார்த்தமான ,உண்மையான ,ரசிகர் பட்டாளமில்லதா,
நிசப்தங்கள் ,கைதட்டல்கள் ,சிரிப்பலைகள் சந்தித்தது வெகு நாளைக்கு பிறகு இந்த படம் மூலமாகத்தான் .
நல்ல கதைக்களம் யதார்த்தமான பாத்திர படைப்பு .முன்பகுதி முழுவதும் flashbak என கதை கையாண்ட விதம் அருமை
டப்பா ஹீரோவா ஜானி ஹீரோவா ??
சிறைக்குள் போலீசை மிரட்டும் போதும் ,அனைவரிடமும் நாமெல்லாம் அகிஸ்ட் என மிரட்டும் போதும் ,தன்னை விட நீளமான கட்டையை எடுத்து கொண்டு அடிக்க கிளம்பும் போதும்,போலீஸ் காரரை மிரட்டும் கைதியாக நடித்திருப்பது ,அடிக்கடி கோபபடுவது ,மப்பில் காமெடி பண்ணுவது , பஞ்சங்களை தீர்த்து வைத்துள்ளார் ,புது முகங்களை பார்த்து சில பழைய முகங்கள் மிரளும் கண்டிப்பாக ..................... டப்பா பிரேம் குமார் நல்ல நடிப்பிற்காக நிறைய கை தட்டல்கள் இவருக்குதான்
அடி ஏமண்டி...........பாட்டுக்கு டப்பா பிரேம் குமார் குடுக்கும் பீலிங்க்ஸ் லவ் பன்னதவனையும் லவ் பண்ண வைக்கும்
மழை பாட்டில் நாமும் கூடவே நனைவது போல ஒரு ஈரம் ......கேமரா மேன் மழையை
மழை துளி வீழ்வதை
படம் பிடித்திருக்கும் அழகு ,
கையாண்டுள்ள வண்ண கலவை உலக தரத்திற்கு ஒரு பிடி மாதிரி
ஹீரோயின் காமம் கலக்காத பால்ய காலத்து நடிகை நல்ல தேர்வு .........ஊமையாமே என நம்மை அச்சச்சோ !!!!!!!!!!!!பாவப்பட வைக்கிறார் .........
ரேணிகுண்டாவில் நடக்கும் இருட்டு தொழில்கள்
போலீஸ் சிறைச்சாலை திரைமறைவு சமாச்சாரங்கள் ............
ஈரமில்லாத மறத்து போன காவல் அதிகாரிகள் ...............
கத்தி எடுத்தவர்கள் ஐந்து பெரும் ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுடப்பட்டு சாகும் காட்சிகள் நீதிக்கும் அநீதிக்குமான சாட்சிகள்
இந்த படம் நிச்சயம் வெற்றி படம்தான் நிறைய பேர் இரண்டு மூன்று முறை பார்த்தவர்கள் என தெரிந்து கொண்டேன்
அந்த குண்டு பய்யன் அடிவாங்கி சாகும் தருணங்கள் அனைவரையும் கவலை பட வைக்கிறது ,,,,,புது முகமா திறமை மிளிர்கிறது நால்வரிடமும்
எல்லோரையும் விட பிரேம்குமார் yeun டப்பா கேரக்டர் மனதில் நிற்கிறது
டப்பா சுடப்படும் போது பின்னணி இசை ஒரு குழந்தையை கொள்வதற்கான இசையோடு முடிவது டைரக்டர் டச் ..............
பேசலாமல் புது முகங்களை வைத்தே நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுத்தல் என்ன ???
ஹீரோ கதையை சொல்ல சொல்லி படம் பிடித்திருப்பது புதுமையான
அருமை ....
இந்த படத்தில் அதிகாலை ,மழை ,லேசான வெய்யில் என வண்ணங்களை காட்சிக்கு பொருத்தமாக கலந்து புதுமையான ஒரு வண்ணகோலம் படைத்திருப்பது தொழில் நுட்ப கலைகர்களின் திரை வண்ணம் ..............
இறுதியில் ஹீரோவுக்கு என்று தனியாக வக்காலத்து வாங்காமல் கொஞ்சம் மரணத்தை நீட்டித்து முடிவில் அவரையும் கொன்று காதலியை காத்திருக்க வைத்து முற்று பெறாமல் படத்தை முற்று பெற வைத்திருக்கும் இயக்குனர் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்
மொத்தத்தில் நல்ல படம் ஒருமுறை தியேட்டர் போய் பாருங்கள் நண்பர்களே
நான் சொன்னதெல்லாம் உங்களுக்கே விளங்கும்
வேட்டைக்காரன்=மொக்கை கத்திக்காரன்
வேட்டைக்காரன் படத்திற்கு ரெண்டு டிக்கெட் கிடைச்சிருக்கு படம் இன்னைக்குத்தான் ரிலீசு வர்றியா ???
ன்னு ஒரு போன் கால் சரின்னு நம்பி.............. போனேன்
சன் டிவி, கே டிவி, சுட்டி டிவி ,சன் மியூசிக், வேற கால்ல்ல விழுந்து பிச்சை எடுக்காத குறையா ட்ரைலர் அடிக்கடி
எல்லா சேனல்லையும் போட்டு டார்ச்சர் பண்ணி
சன் பிச்சர்ஸ் வெளியிடும் படம் பாக்காட்டி ரேஷன் கார்டு
,அரிசி ,மண்ணெண்ணெய் , ஒன்னும் கிடையாதுன்னு அறிவிப்பு வந்தாலும் வரலாம் எச்சரிக்கை !!!!!!!!!!!!!!!!!!
நல்ல வேலை மண்டைல மூளைய பத்திரமா கழட்டி வச்சிட்டு போனேன்
படம் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரைக்கும் லாஜிக் + கதையில்லாமல் படம் பார்க்கும் ஒரே பரபரப்பு விறுவிறுப்பு
விஜய் இன்ட்ரோ சங்கு சாரி சாங்கு
நான் அடிச்ச தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட பாட்டுக்காக இவருக்கு போலீஸ் வேலை தரலாம்
விஜய் இன்ட்ரோ பைட்டு
இங்க ஊர்ல பழைய சுவர் ,கட்டிடம் உடைக்கனும்ன விஜய கூப்பிடலாம் காங்க்ரீட் கல்லுல ஒரு குத்துல உடைப்பார் பாருங்க ,எனக்கு ஒன்ஸ்மோர்
அதாங்க ஒன்ஸ் வந்திருச்சி
விஜய் டயலாக்
இந்த படத்தில் பரவாயில்லை முன்பு குருவி படத்தில் செய்த தவறை திருத்தயுள்ளர்
விஜய் அல்லக்கை காமெடியன்ஸ் ஜால்ராஸ்
பாவம் திறமை இருந்தும் இந்த படத்தில் அவர்கள் பயன்படுத்தபடாமல் விட்டிருக்கிறார்கள்
ஹீரோயினி இண்ட்ரோ பிட்டு
ஹீரோயின் வயசாகி அக்க ரோல்ல நடிக்கும் முன்பாக படம் வெளியானதால் சில நண்பர்கள் அருந்ததி anusgavirgaga படம் பார்க்க வந்திருப்பதாக சொன்னார்கள்
லவ் சாங் நாலு
விஜய் அன்டோனி விஜய்க்காக மியூசிக் பண்ணியிருக்கிறார் பரவாயில்லை பாட்டு படத்தை காப்பாத்தும்
சண்டை மூணு
ஹீரோவின் மூன்று அடிவங்கல்களுக்கு பிறகு வழக்கம் போல இருபது முப்பது பேரை தனியாளாக நின்று அடித்து துவைப்பது பாவம்ப்பா stunt aartistgal
அவ்வளவே படம் அளவாக பண்ணி சாரி பின்னியிருக்கிறார்கள்
விஜய் பள்ளி பிளஸ் டு மாணவராக அறிமுகமாகி
கல்லூரி மாணவராக இதில் நடித்திருப்பது நகை சுவை காட்சிகள்( ஏய் சிரிங்கப்பா பின்னல் இருக்கையில் இருந்து நக்கல்ஸ் )
ஆட்டோ ஓட்டுகிறார் அடிதடி பண்ணுகிறார் வழக்கம் போல படிக்க வில்லை
அதன் அடிக்கிறார் இல்ல ................கல்லூரியில் காதல் வராமல் கல்லூரிக்கு வெளியே காதல் வருவது புதுமை
இத்தனைக்கு மேலாக இடைவேளை இடைவெளி இல்லாமல் ஆளாளுக்கு வசனம் பேசி ,பஞ்ச் டயலாக் பேசி கொன்னு குத்துயிராக சில பேர் தூங்கி வழிந்தார்கள்
அவ்வப்போது ஹீரோயின் அக்கா வந்து எழுப்பி விட்டாக .....
நானும் இந்த படத்தில் நடிச்சிருக்கேன் ஞாபகபடுத்தி போனாக ..........
இளைய தளபதி விஜய் ரசிகர்கள் தான் பாவம் மொத்தமாக குழம்பி திரிவார்கள்
போலீஸ் வேலைக்கு போலாமா??
வேண்டாமா ? ஒன்னும் புரியல
இடை வேளைக்கு முன்னால போலீஸ்
பின்னாடி ரவுடி முள்ளை முள்ளால் புடுங்கும் ஹீரோ விஜய்
இளிச்ச வாய் வில்லன் பொறுமையாக தானாக சின்னபுள்ளதனமாக அடிவாங்கும் பொறுமையான வில்லன் எவ்வளவு அடிச்சாலும் வாங்குறான் இவன் ரொம்ப நல்லவனொன்னு நினைக்க வைப்பதை டைரக்டர் திறமை ன்னுதான் சொல்லணும்
எங்க கைப்புள்ள கூட இப்படி அடிவாங்கினது இல்லல ????????
ஆக அடிக்கடி அனைவரும் பஞ்சத்துக்கு பன்ஜ் பேசி கொல்லும் படம்
விஜய் அருவியில் குதிப்பதை அபோகளிப்டவிலும் காப்பியடித்த டைரக்டர் பின்னணி மியூசிக் கோடா திருடியிருப்பது கேவலம் ....................... திருட தெரியாதவன் கூட இப்படி அப்பட்டமாக திருடிய ஸீன் +மியூசிக் பின்னி எடுக்கிறார்
கிளைமாக்ஸ் இந்திய வரலாற்றில் குருடன் கையில் துப்பாக்கி தந்து வில்லனை கொன்றோலிப்பது புதுமை
நம்ப முடியவில்லை கை தட்ட யாருமில்லை
காரி துப்பவும் முடியவில்லை இங்கே எச்சில் துப்பதீர் என்று அறிவிப்பு இருந்ததால்
இறுதியாக
வேட்டைக்காரன் நம் கண்களையும் காதுகளையும் பதம் பார்க்கும்
மொக்கை கத்திக்காரன்
தல அஜித் அடுத்த அட்டாக்அசல் வரும்வரை பொறுத்திருப்போம் ....................
Wednesday, December 16, 2009
தெரியவில்லை
இவர்கள் சொர்கத்தை கேட்கவில்லை
நரகம் வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் .................
இவ்வளவு அவமானமும் வேதனையும் அவர்களை இன்னமும் எத்தனை காலம் வைத்திரும்ம்குமோ ????
தெரியவில்லை
நரகம் வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் .................
இவ்வளவு அவமானமும் வேதனையும் அவர்களை இன்னமும் எத்தனை காலம் வைத்திரும்ம்குமோ ????
தெரியவில்லை
Tuesday, December 8, 2009
Wednesday, November 25, 2009
Thursday, November 19, 2009
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
உன்னை எப்போதும் உன்னை விட
உயர்ந்தவர்களோடு மட்டுமே ஒப்பிட வேண்டும்..........
அப்படியானால்தான் நீ உயர்வை சந்திக்க முடியும் ............
இந்த உலகம் முழுக்க முழுக்க பணத்தால் இயங்கும் ஒரு இயக்கம்
இங்கே பணம் பிரதானம் மற்றதெல்லாம் சாதாரணம் .
"இல்லானை இல்லாளும் வேண்டாள் "
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை" வள்ளுவன் வாக்கு பொருந்தியே நிற்கும் எக்காலத்திற்கும் எந்த நாட்டிற்கும் .
Monday, November 16, 2009
கடற்கரை மணல்வெளியில்
Tuesday, November 3, 2009
அண்மையில் சேலம் சென்றிருந்த பொழுது நண்பர் ஒருவர் இந்த ருசியான தகவலை கூறினார் திருநங்கைகள் ஒரு குழுவாக "மென்மை" பல்சுவை இட்லி கடை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் .அதிலும் விதம் விதமாக கீரை இட்லி ,காளான் இட்லி ,காய்கறி இட்லி ,பன்னீர் இட்லி ,ஐந்து வகை சட்னி ,ருசியான சாம்பார் ( நாக்கில் எச்சில் ஊருதில்ல) சொல்லி இன்று இரவு அங்கே சென்று சாப்பிட வேண்டும் என்று கூறினார் .
நமக்குள் மகிழ்ச்சி , ஏற்கனவே நாம் எழுதியிருந்த தொழில் முனைவோர் கட்டுரைகளுக்கும் ,
திருநங்கைகள் பற்றிய கவிதை வரிகளுக்கும் பின்னூட்டம் எழுதி என்னை ஊக்குவித்தனர் என் நண்பர்கள்.
இது போல இன்னும் நிறையா எழுத வேண்டும் என்று ,பெரும்பாலும் கற்பனைகளை நிஜத்தில் காணும் பொழுது ஏற்படும் மகிழ்வுக்கு அளவே இல்லை .
மாற்றம் என்ற ஒன்றுதானே மாறாத ஒன்று .இந்த மாற்றம் இன்று அவர்கள் வாழ்விலும் விளக்கேற்றியிருப்பது வரவேற்க கூடியது ,நாமும் பின்பற்ற பட வேண்டிய ஒன்று
"எனது ஆவல் இதுதான் திருநங்கைகள்
" பிச்சை எடுத்து அல்லது மிரட்டி சில்லறை வசூலிப்பது ,
பொது இடங்களில் பிறர் மனம் புண்படும் விதம் ,அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது முதலான செயல்களை இவர்கள் தவிர்த்து இவர்களும் மாற்ற வெகுஜனங்களை போலவே வாழ வேண்டும் .
அந்த கவிதை வரிகள் இவைகள் தாம்
ஒரு திருநங்கை பூ விற்றால் ஒரு திருநங்கை புத்தகம் விற்றால் வாங்குவீர்களா ??ஒரு திரு நங்கை சோப்பு ,செண்டு , பொருட்களை விற்கும் பிரதிநிதியாக உங்கள் அலுவலகம் வந்தால் அனுமதிப்பீர்களா ?????வாங்குபவர்களை பற்றி விற்பவன் கவலைபடுவதில்லை ஒரு நாளும் வாங்குபவனும் விற்பவன் பற்றி கவலை படாமல் இருந்தால் நலம் ..
ஆனால் இன்று அதை விட ஒருபடி மேலாக தரமான சுவை மிகுந்த இட்லிகளை மிகவும் நியாயமான விலையில் விற்பனை செய்கிறார்கள் என்ற போது இவர்களை போல எல்ல திருநங்கைகளும் இது போல சுய தொழில் அல்லது இன்னும் பிற பணிகளில் ஈடுபட்டால் எவ்வளவு நன்றாக இருக்க்கும் .
அங்கே அவர்களது புதிய முயற்சிக்கு மக்கள் ஆதரவுக்கு நிரம்பி வழியும் வாடிக்கையாளர்களே சாட்சி .
"தாய் விழுதுகள் அறகட்டளை " தாய்களால் கூட புறக்கணிக்க கூடிய வாய்ப்புள்ள இவர்களை வரவேற்று வாய்ப்பு கொடுத்து பயிற்சியும் ஊக்கமும் தந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது ....ஒருநாளேனும் சேலம் சென்றால் விசாரித்து இவர்கள் கடையில் வித விதமான இட்லிகளை சுவத்துபாருங்கள் அங்கே இவர்களது உழைப்பின் ருசி உங்களை மீண்டும் ஒருமுறை கேட்டு சாப்பிட்டுபின்னர் பொட்டலம் கட்டி வருவீர்கள் என்னை போலவே நீங்களும் .
மேலும் தகவல்களை படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
http://www.thehindu.com/2009/09/04/stories/2009090450570200.htm
நமக்குள் மகிழ்ச்சி , ஏற்கனவே நாம் எழுதியிருந்த தொழில் முனைவோர் கட்டுரைகளுக்கும் ,
திருநங்கைகள் பற்றிய கவிதை வரிகளுக்கும் பின்னூட்டம் எழுதி என்னை ஊக்குவித்தனர் என் நண்பர்கள்.
இது போல இன்னும் நிறையா எழுத வேண்டும் என்று ,பெரும்பாலும் கற்பனைகளை நிஜத்தில் காணும் பொழுது ஏற்படும் மகிழ்வுக்கு அளவே இல்லை .
மாற்றம் என்ற ஒன்றுதானே மாறாத ஒன்று .இந்த மாற்றம் இன்று அவர்கள் வாழ்விலும் விளக்கேற்றியிருப்பது வரவேற்க கூடியது ,நாமும் பின்பற்ற பட வேண்டிய ஒன்று
"எனது ஆவல் இதுதான் திருநங்கைகள்
" பிச்சை எடுத்து அல்லது மிரட்டி சில்லறை வசூலிப்பது ,
பொது இடங்களில் பிறர் மனம் புண்படும் விதம் ,அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது முதலான செயல்களை இவர்கள் தவிர்த்து இவர்களும் மாற்ற வெகுஜனங்களை போலவே வாழ வேண்டும் .
அந்த கவிதை வரிகள் இவைகள் தாம்
ஒரு திருநங்கை பூ விற்றால் ஒரு திருநங்கை புத்தகம் விற்றால் வாங்குவீர்களா ??ஒரு திரு நங்கை சோப்பு ,செண்டு , பொருட்களை விற்கும் பிரதிநிதியாக உங்கள் அலுவலகம் வந்தால் அனுமதிப்பீர்களா ?????வாங்குபவர்களை பற்றி விற்பவன் கவலைபடுவதில்லை ஒரு நாளும் வாங்குபவனும் விற்பவன் பற்றி கவலை படாமல் இருந்தால் நலம் ..
ஆனால் இன்று அதை விட ஒருபடி மேலாக தரமான சுவை மிகுந்த இட்லிகளை மிகவும் நியாயமான விலையில் விற்பனை செய்கிறார்கள் என்ற போது இவர்களை போல எல்ல திருநங்கைகளும் இது போல சுய தொழில் அல்லது இன்னும் பிற பணிகளில் ஈடுபட்டால் எவ்வளவு நன்றாக இருக்க்கும் .
அங்கே அவர்களது புதிய முயற்சிக்கு மக்கள் ஆதரவுக்கு நிரம்பி வழியும் வாடிக்கையாளர்களே சாட்சி .
"தாய் விழுதுகள் அறகட்டளை " தாய்களால் கூட புறக்கணிக்க கூடிய வாய்ப்புள்ள இவர்களை வரவேற்று வாய்ப்பு கொடுத்து பயிற்சியும் ஊக்கமும் தந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது ....ஒருநாளேனும் சேலம் சென்றால் விசாரித்து இவர்கள் கடையில் வித விதமான இட்லிகளை சுவத்துபாருங்கள் அங்கே இவர்களது உழைப்பின் ருசி உங்களை மீண்டும் ஒருமுறை கேட்டு சாப்பிட்டுபின்னர் பொட்டலம் கட்டி வருவீர்கள் என்னை போலவே நீங்களும் .
மேலும் தகவல்களை படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
http://www.thehindu.com/2009/09/04/stories/2009090450570200.htm
Tuesday, October 27, 2009
பகல் கொள்ளை ,ராக்கொள்ளை,
படம் திரையரங்கு என்றாலே இப்போதெல்லாம் பயம் எனக்கு
நல்லபடம் ,தரமான ,கண்ணையும் ,காதையும் பதம் பார்க்காத யதார்த்த சினிமாவை அவப்பபோது நண்பர்களின் பரிந்துரைத்தல் பேரில் சென்று பார்க்கலாம் என்றால்
டிக்கெட் விலைதாறு மாறாக இவர்களே நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் .முப்பத்தி ஐந்து ரூபாய் டிக்கெட் என்பது ரூபையகவும் ,இருபது ரூபாய் டிக்கெட் ஐம்பது ரூபாயாகவும் பகல் கொள்ளை ,ராக்கொள்ளை, என மொத்த ஜனங்களையும் ஏமாத்தி பிழைக்கும் இது போன்ற திரையரங்கம் செல்லாமல் இருபத்து ரூபாய்க்கு டிவிடி வாங்கி ஹாயாக வீட்டில் ஹோம் திடோரில் படம் பார்க்காமல் இருபார்களா நமது மக்கள் உங்கள் கொள்ளைக்கு தக்க பதிலடி பிளாட்பாரத்தில் திருட்டு டிவிடி
நல்லபடம் ,தரமான ,கண்ணையும் ,காதையும் பதம் பார்க்காத யதார்த்த சினிமாவை அவப்பபோது நண்பர்களின் பரிந்துரைத்தல் பேரில் சென்று பார்க்கலாம் என்றால்
டிக்கெட் விலைதாறு மாறாக இவர்களே நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் .முப்பத்தி ஐந்து ரூபாய் டிக்கெட் என்பது ரூபையகவும் ,இருபது ரூபாய் டிக்கெட் ஐம்பது ரூபாயாகவும் பகல் கொள்ளை ,ராக்கொள்ளை, என மொத்த ஜனங்களையும் ஏமாத்தி பிழைக்கும் இது போன்ற திரையரங்கம் செல்லாமல் இருபத்து ரூபாய்க்கு டிவிடி வாங்கி ஹாயாக வீட்டில் ஹோம் திடோரில் படம் பார்க்காமல் இருபார்களா நமது மக்கள் உங்கள் கொள்ளைக்கு தக்க பதிலடி பிளாட்பாரத்தில் திருட்டு டிவிடி
Sunday, October 25, 2009
பேராண்மை
பேராண்மை
பார்க்க தகுதியுள்ள படம் வரிசையில் சமீபத்தில் வெளிவந்தது வெற்றிகரமாக ஓடிகொண்டிருப்பது பொழுது போக்கு படங்களுக்கு மத்தியில் ,போரடித்து வேறு வழியில்லாமல் திரைகதை,,,,, என்னும் பெயரில் இவனுக கொடுக்கும் வலிகளை
பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து விட்டோம் என்ற பெயரில் வேறு வழியில்லாமல் மூன்று மணி நேரம் பொறுமையை சோதிக்கும் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமாக
ஒரு படம் இயற்கை விவசாயம் ,காடுகளின் முக்கியத்துவம் ,உலகமயமாக்கல் ,பொதுஉடைமை ,சுரண்டல் ,நவீன விவசாயம் என்ற பெயரில் மலட்டு விவசாயம்,,, ஆதிக்க வர்க்கத்தினரின் ஆதிக்க பாதிப்புகள்...........என சமூக அக்கறை கலந்து இந்த படம் வெளிவந்திருப்பது தனித்த பாதையில் கதை பயணம் செய்திருப்பது ............இடைவேளை வரை படம் நகரும் விதம் இடைவேளைக்கு பிறகு வழக்கம் போல சினிமாத்தனம் பதினாறு பேரை நான்கு பேர் கொண்ட குழு அழித்தொழிப்பது வழக்கமான தமிழ் சினிமா பாணி ..............வேறுவழியில்லை தயாரிப்பாளர் தப்பிக்க நூறு சதவீத நல்லபடம் எடுத்தல் தலையில் துண்டுதான் மசாலா கலப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று
இயக்குனரின் முந்தய படமான" ஈ " உலகின் பேராளிவுக்கு வழிவகுக்கும்
"பயோவார் " நோய்கிருமிகளை பரப்பி அதற்கான மருந்து விற்பனை மூலம் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவது பற்றிய விழிப்புணர்வு படமாக அமைந்ததில் இயக்குனர் ஒரு சமூக அக்கறையுள்ள போராளி என்பது புலனாகும் ......
இயற்கை என்ற கடற்கரை காதலை அழகியல் குறையாமல் உப்புகற்று நம்மை வருடும் உணர்வோடு காட்சியமைத்த விதம் ஒளிப்பதிவுக்கு தரமான இடமளித்த தேசிய விருதும் பெற்றது நினைவில் இருக்கிறது
இனி படத்திற்குள் பயணம் செய்வோம்
விஜய் ,அஜித் ,சிம்பு ,சுள்ளான் ,சல்லி,சுள்ளி வரிசையில் டைட்டில் முடிந்தவுடன் வழக்கமான ஹீரோதன் புகழை தன் வாய்கிழிய புகழ் பாடும் ஒரு குத்து அறிமுக பாடல் என்று சலித்தால் ,,,,,,,,,,,,
காட்டுப்புலி என்னும் முதல் பாடல் அக்கறையோடு சமூக ,பிரச்சனைகளை சொல்லுகின்ற அழகான பாடல் .பழங்குடிகளது சிறப்பு ,வாழ்க்கை முறை உழைபாளிகளது உழைப்பு ,வனங்களின் வனப்பு ,என திரையில் விரியும் அத்தனை காட்சிகளும் அருமை ..........
குறிப்பாக சுத்தியலும் கதிரருவாவும் ஆணும் பெண்ணும் இணைந்து பிடிக்கும் அந்த ஒரு விநாடி காட்சி இயக்குனரின் பொதுஉடைமை சிந்தனை அழகாக வெளிபடுகிறது
தியேட்டரை விட்டு வெளிவந்த பின்னும் அழியாத ஓவியமாக கண்ணுக்குள் நிற்கும் .
வைரமுத்து இன்னும் அதே சிவப்பு சித்தாந்ததில் ,கம்யுனிச ,பகுத்தறிவு சிந்தனையுடன் பாடல் எழுதியிருப்பது அருமை
எங்கே போனாய் வைரமுத்து இத்தனை நாளாய் ????
தேயிலை மரமாகும் வளர விடுவதில்ல
(வளர விடாமல் வெட்டி வெட்டி இலை துளிர்க்க செய்து கிள்ளி கொழுந்தை பறிப்பது )
சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்ல
உயரத்தில் வாழ்கிறோம் உயரவில்லை வாழ்க்கை
தேயிலை தொழிலாளர்களின் வாழ்கையை இரண்டே வரிகளில் வடித்த வைர வரிகள் அவை கொஞ்சம் தேநீர் நிறைய வானம் எழுதிய வைர முத்து உங்களிடம் இன்னும் இது போன்ற தத்துவ பாடல்களை எதிர்பார்க்கிறது தமிழ் ரசிகர்கள் உலகம்
பழங்குடியிலிருந்து ஒரு இளைஞன் படித்து முன்னேறி வனத்துரையில் அரசு பணி பெறுவதென்பது சாதரமான ஒரு காரியம் அல்ல.
அதன் பிறகு மாணவிகளால் , உயர் அதிகாரிகளால் ஏளனம் செய்யபடுவதும் உண்மைகள் மிகை படுத்தாத யதார்த்தம் ...
மாணவிகளின் இரட்டை வசனம் ,கவர்ச்சி ,மிதம் மிஞ்சிய சண்டை கட்சிகள் ,சினிமாத்தனம் இவையெல்லாம் தேவை இல்லாத ..............என்றாலும்
சுதந்திர நாளில் மிட்டாய் கொடுத்து தேசிய கீதம் பாட சிறுவர்களை அணிவகுப்பது போல இன்றைய ரசிகர்களை திரையரங்கிற்குள் வரவழைக்க ,போரடிக்காமல் ,
ரசிகனை தியேட்டரை விட்டு வெளியேற விடாமல் நகைசுவை கொஞ்சம் ,கவர்ச்சி கொஞ்சம் ,என சரிவிகிதமாக படத்தை வசனம் ,திரை கதை மூலமாக நகர்த்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் ,வடிவேலு பழங்குடி உறவினர்களை பார்த்து பேசும் வசனம் யதார்த்தம்
பெண்களை இதுவரைக்கும் கவர்ச்சி பதுமைகளாக ,அவர்தம் உறுப்புகளை விதம் விதமாக சித்தரிக்கும் கேவலமான திரைப்பட வரிசையில்
பெண்களின் வலிமைகளை ,திறமையை ,அறிவு கூர்மையைபடமாகியதர்க்ககவே படத்தின் இயக்குனரை மனம் விட்டு பாராட்டலாம் .
ஐந்து பெண்கள் ஒரு கதாநாயகன் என்று இதற்கு முன்பு நிறையா படங்கள் காம களியாட்டங்கள் நிறையா வந்துள்ளன ,வரப்போகின்றன ஏன் இது போல பெண்களின் திறமையை ,வலிமையை முன்னிறித்தி ஒரு படம் கூட எடுக்க வில்லை .தமிழ் திரையுலகம் சிந்திக்க வேண்டும் .
பெண் என்னும் பேராண்மை இந்த படத்தில் மிக அழகாக கதையம்சத்தோடு எளிவந்திருப்பது பாராட்ட பட வேண்டியது .
படத்தின் இரண்டாம் பாகம் சினிமாதனமகவும் சண்டை கட்சிகளுக்குள் நான் போக விரும்ப வில்லை அவைகள் வலுகட்டாயமாக திணிக்க பட்டிருப்பது அப்பட்ட உண்மை ,,,
இயற்கை மலைத்தொடர்கள் ,தேயிலை தோட்டங்கள் ,பழங்குடியினர் வசிப்பிடங்கள் ,அவர்த்தம் வாழ்க்கை மத்தியில் படமாக்கிய விதம் அருமை .பசுமை குறையாமல் படம் பிடித்த கேமரா மேனுக்கு பாராட்டுகள் ..
MGR காலத்திற்கு பிறகு எனெக்கு தெரிந்த்த வரையில் மக்கள் பிரச்சனைகளையும் ,வலியையும் பாட்டில் வைத்து கட்சி படுத்திய வெகு சில படங்களில் இதுவும் ஒன்று
நாயகன் :ஜெயம் ரவி
பழங்குடி இனத்தில் இருந்து வரும் ஒரு ஹீரோ ,உடல் வலிமை ,மன வலிமை ,இரண்டிற்கும் நிறையா திறமைகள் உள்ள நாயகன் ஜெயம் ரவி அடக்கத்தோடு நடித்திருப்பது பாராட்டுக்கு உரிய நடிகர் .முதல் பாடலே படத்தின் தரத்தையும் ,காட்சியமைப்பும் அருமை ,கம்பு சுத்துவது ,நடனம் ஆடுவது ,சண்டை போடுவது என தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகசரியாக பயன்படுத்தியுள்ளார் .
ஐந்து நாயகிகள்
சொன்னதை சொல்ளுமமாம் கிளிபிள்ளை போல இயக்குனர் சொன்னதை அப்படியே ஏற்று காடு ,மலை ,அட்டைகடி ,கரடு முரடு மலைபதைகள் ,நதிக்குள் நடைபயணம் என ம்குந்த சிரத்தையோடு அணு அளவும் பயம் இல்லாமல் நடித்த உங்கள் கூட்டணிக்கு விருது நிச்சயம் கிடைக்கும் ..
காதல படத்தில் சந்தியாவின் தோழியா அந்த காதல வயப்பட்ட பெண் நல்ல நடிப்பு மொத்தத்தில் இந்த கூட்டணி "வெற்றி கூட்டணி "
Monday, October 12, 2009
புதியதலைமுறை
புதியதலைமுறைக்கு முதலில் எனது வாழ்த்துகள்
நீண்ட நாட்களாக வளர் இளம் தலைமுறைகென நல்லதொரு இதழ் இல்லையே என்ற எனது கவலையை போக்கியது .அழகான வடிவமைப்பில் கருத்துள்ள
கட்டுரைகளை கட்டுகோப்பாக வெளிவருவதில் இருந்தே தெரிகிறது இது அனுவப வெற்றி கூட்டணி என்று , சினிமாவுக்கும் அரசியலுக்கும் (இரண்டும் சாக்கடையாகி போனது வேறு விஷயம் ) முக்கியத்துவம் தராமல் இருப்பது வியப்பு ,கடைசி வரை இந்த தரத்துடனும் ,பொலிவுடனும் சரியான விலையில் கிடைத்ததால் எத்தனை தலைமுறைக்கும் வேண்டுமானாலும் இந்த இதழ் நிலைத்திருக்கும் ,கணினி வேலை வாய்ப்பு ,மருத்துவம் ,கேள்விபதில் சந்தேகம் , என அதிகரித்தால் நல்லது .பொழுது போக்கும் இதழ்களுக்கு நடுவில் பொழுது போனால் திரும்பாது என்பதற்காக அறிவின் வாசல்கதவை அகலமாக திறந்து வைக்கும் புதியதலைமுறை இதழுக்கு ஒரு சிறப்பு வணக்கம்
நீண்ட நாட்களாக வளர் இளம் தலைமுறைகென நல்லதொரு இதழ் இல்லையே என்ற எனது கவலையை போக்கியது .அழகான வடிவமைப்பில் கருத்துள்ள
கட்டுரைகளை கட்டுகோப்பாக வெளிவருவதில் இருந்தே தெரிகிறது இது அனுவப வெற்றி கூட்டணி என்று , சினிமாவுக்கும் அரசியலுக்கும் (இரண்டும் சாக்கடையாகி போனது வேறு விஷயம் ) முக்கியத்துவம் தராமல் இருப்பது வியப்பு ,கடைசி வரை இந்த தரத்துடனும் ,பொலிவுடனும் சரியான விலையில் கிடைத்ததால் எத்தனை தலைமுறைக்கும் வேண்டுமானாலும் இந்த இதழ் நிலைத்திருக்கும் ,கணினி வேலை வாய்ப்பு ,மருத்துவம் ,கேள்விபதில் சந்தேகம் , என அதிகரித்தால் நல்லது .பொழுது போக்கும் இதழ்களுக்கு நடுவில் பொழுது போனால் திரும்பாது என்பதற்காக அறிவின் வாசல்கதவை அகலமாக திறந்து வைக்கும் புதியதலைமுறை இதழுக்கு ஒரு சிறப்பு வணக்கம்
Thursday, October 1, 2009
கிராமத்தில் வளர்ந்தது திரிந்த என் பால பருவம்
வாய்க்கால் மீன்கள்
கிணற்று குட்டிகரனக் குளியல்
நெருப்பில் சுட்ட மண் வேர்கடலை ,கப்ப கிழங்கு
திருட்டு இளநீர் ,தேங்காய்
ஒடித்த கரும்பு
கல்லெறிய காய்த்திருக்கும் மாமரம்
பழுத்து கொட்டிகிடக்கும் நாவல் பழ மரம்
நுங்கு அமுது தரும் பனைமரம்
புழுதி பறக்கும் கபடி விளையாட்டு
நில வெளிச்ச முற்றத்து முதியோர்களின் கதை புராணங்கள்
அம்மியில் அரைத்த ,
உரலில் இடித்த ,
ஆட்டுரலில் ஆட்டிய ,
விறகடுப்பில் வெந்த
பனை விசிறி
பாட்டியின் முந்தானை
கிராமத்தில் வளர்ந்தது திரிந்த என் பால பருவம்
சாலையோரம் பயணம் செய்யும் ஜன்னல் வழியாக பசுமையாக விரியும் ............................
கிணற்று குட்டிகரனக் குளியல்
நெருப்பில் சுட்ட மண் வேர்கடலை ,கப்ப கிழங்கு
திருட்டு இளநீர் ,தேங்காய்
ஒடித்த கரும்பு
கல்லெறிய காய்த்திருக்கும் மாமரம்
பழுத்து கொட்டிகிடக்கும் நாவல் பழ மரம்
நுங்கு அமுது தரும் பனைமரம்
புழுதி பறக்கும் கபடி விளையாட்டு
நில வெளிச்ச முற்றத்து முதியோர்களின் கதை புராணங்கள்
அம்மியில் அரைத்த ,
உரலில் இடித்த ,
ஆட்டுரலில் ஆட்டிய ,
விறகடுப்பில் வெந்த
பனை விசிறி
பாட்டியின் முந்தானை
கிராமத்தில் வளர்ந்தது திரிந்த என் பால பருவம்
சாலையோரம் பயணம் செய்யும் ஜன்னல் வழியாக பசுமையாக விரியும் ............................
Tuesday, September 29, 2009
சினிமா சினிமா
அழகி ,ஆட்டோகிராப் ,வெயில் ,காதல் ,சுப்ரமணியபுரம் ,பூ ,பருத்திவீரன் ,வெண்ணிலா கபடி குழு ,பசங்க ,நாடோடிகள் ,
இவைதாம் நான் பார்க்க பரிந்துரைக்கப்பட்ட நல்ல படங்கள் ,செயற்கை தனம் இல்லாத சாதரண மனிதர்களை நிழலாக இல்லாமல் நிஜங்களாக பதிவு செய்யும்
இப்படங்கள் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சாதனை ,ரசிகர்களும் இதைதான் பெரிதும் விரும்பி கொண்டாடுகின்றனர்
மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுப்பிய படங்கள் ............கிராமத்து யதார்த்தமும்
உண்மையின் பிம்பமுமாக அசலாக வாழ்கையை வருடும் படங்கள் அமைவது தமிழ் சினிமாவின் நல்லகாலம் ....புதிய இயக்குனர்கள் ,புதிய முகங்கள் , தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பது சற்று ஆறுதலான விஷயம் ,கோடிகணக்கில் பணம் போட்டு தறுதலை தனமாக படம் எடுத்து தயாரிப்பாளர் கடன் பட்டு படம் ஓடாமல் வீணாகும் பணம் ,பல கோடி .நேர விரயம் ,(ரசிகனின் நேரமும் இதில் அடங்கும் )
பழைய படங்களில் வெற்றிகரமாக ஓடிய படங்களை மீண்டும் புதிதாக இளம் கதாநாயகர்களை வைத்து எடுத்தால் என்ன ???
ரத்தகண்ணீர் படம் சமீபமாக அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது MR ராதாவின் நடிப்பும் ,வசனங்களும் , சிரிப்பும் சிந்தனைக்கும் உரியவை .இந்தப்படத்தை மீண்டும் புதிய வார்ப்பில் வண்ணப்படமாக எடுத்தால் நிச்சயம் ஹிட்டாகும் .பில்லாவை போல ...............................
Subscribe to:
Posts (Atom)