Monday, March 31, 2008
Thursday, March 27, 2008
Tuesday, March 25, 2008
தீ -பாரதீ
Monday, March 24, 2008
Saturday, March 22, 2008
Friday, March 21, 2008
Thursday, March 20, 2008
தினம் ஒரு குறள்
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை
(பிரிவாற்றாமை 116. பிரிவாற்றாமை 1157)
விளக்கம்:நம்மை தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன் கையிலிருந்து சுழலும் வளைகள் ஊரறிய எடுத்துக் காட்டி தூற்ற மாட்டவோ?
இறையிறவா நின்ற வளை
(பிரிவாற்றாமை 116. பிரிவாற்றாமை 1157)
விளக்கம்:நம்மை தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன் கையிலிருந்து சுழலும் வளைகள் ஊரறிய எடுத்துக் காட்டி தூற்ற மாட்டவோ?
நம் நாட்டின் பிரதமர் யார் ? மன் மோகன் சிங்,மாடிவீட்டு குப்புசாமி,அடுத்தாத்து அம்புஜம் இதற்கு விடை தெரிந்தால் மேற்கொண்டு கீழே படிக்கலாம்... டிவி சேனல்களில் ரியாலட்டி நிகழ்ச்சிகளில் நேயர்களுக்கு கேள்விகளை கேட்டு, உங்களுக்கு சரியான விடை தெரிந்தால் எங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள் என்று அறிவிப்பார்கள். உதாரணத்திற்கு கேள்வி இப்படி இருக்கும் நம் நாட்டின் பிரதமர் யார் ? மன் மோகன் சிங்,மாடிவீட்டு குப்புசாமி,அடுத்தாத்து அம்புஜம் இதில் எந்த விடையை அனுப்பினாலும் அந்த சேனலுக்கு லாபம் தான். ஒரு கிராம் தங்கத்திற்கோ, அல்லது ஒரு கிலோ வெங்காயத்திற்கோ ஆசைபட்டு நம்ம மக்கள் உடனே எஸ்எம்எஸ் அனுப்பிவிடுவார்கள். சன் மியூசிக் சேனலில் பார்த்தால் "நான் ஒரு முட்டாளுங்க" பாடல் ஓடிக்கொண்டிருக்கும், கீழே "பாமா ஐ லவ் யூ, "சீவாஜி தாண்டா பாஸ்" போன்ற அறிய தகவல்கள் நிறைந்த எஸ்எம்எஸ்-க்களை பார்த்தால் நாட்டில் எவ்வளவு பேர் வேலையுடன் இருக்கிறார்கள் என்பது புரியும். ஜோடி நம்பர் 1, சன் டிவி தங்க வேட்டை, குரேர்பதி நிகழ்ச்சி, மதன்'ஸ் திரைபார்வை, கலக்க போவது யாரு?, என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்த கூத்து இருக்கிறது. இந்த மாதிரி அனுப்பும் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உங்களிடம் வசூலிக்கபடுகிறது. சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் பதிவான வாக்குகள் 1.5 லட்சம். ஒரு வாக்குக்கு 4 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் இதில் கிடைத்த வருவாய் 6 லட்சம். இந்த பச்சா நிகழ்ச்சிக்கே இவ்வளவு என்றால் அமிதாபச்சன் நிகழ்ச்சிக்கு எவ்வளவு வரும் ? 50 மில்லியன் எஸ்எம்எஸ்க்கு மேல் என்கிறது தகவல் ! ஸீ தொலைக்காட்சி நிறுவனம் ஒரு மாதத்தில் 10 முதல் 50 மில்லியன் எஸ்எம்எஸ்-களை பெறுகிறது. ஸ்டார் டிவிக்கு மாதம் ஒன்றுக்கு 5 முதல் 15 மில்லியன் எஸ்எம்எஸ்-கள் வந்து குவிகிறது. சோனி தொலைக்காட்சியின் இந்தியன் ஐடல் நிகழ்ச்சிக்கு மட்டும் 10 கோடி எஸ்எம்எஸ்-கள் குவிந்துள்ளன.தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்து குவியும் எஸ்எம்எஸ்-கள் ஏராளம். அனைத்தையும் சரிபார்த்து முடிவுகளை வெளியிடுவது எவ்வாறு நடைபெறுகிறது என்பது முக்கியமான ஒன்று. குவியும் எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி அழைப்புகளை இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சமாளிக்கும் விதம் சுவாரஸ்யமானது. இதற்கென்றே தொலைக்காட்சி சானல்கள் தகவல் தொழில்நுட்ப குழு ஒன்றை நியமித்து நிர்வாகம் செய்து வருகிறது. இந்த குழுவினருக்கு அனைத்து எஸ்எம்எஸ்-களையும் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட 10 அல்லது 20 நிமிடங்களே உள்ளது. இதற்கு ஸீ தொலைக்காட்சி தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பிற்கு ரூ.5 கோடி முதல் 10 கோடி வரை முதலீடு செய்திருக்கிறது.செல்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும் இந்த எஸ்எம்எஸ்-களை நிர்வாகம் செய்யும் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதனால் உருவாகும் மொத்த வருவாயில் 70 சதவீதம் தொலைபேசித் துறைக்கு செல்கிறது. 30 சதவீதம் மட்டுமே தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைக்கிறது. 30 சதவீத லாபத்திற்கு இவ்வளவு முதலீடுகள் செய்யப்படுகிறது என்றால், இதன் மூலம் வரும் மொத்த வருவாயை யோசித்துப் பாருங்கள். அந்நியனில் வரும் ஐந்து பைசா உதாரணம் ஞாபகத்துக்கு வரும்
சிவாஜியையும் எம்.ஜி.ஆரையும் நையாண்டி செய்து இண்டர்நெட்டில் எழுதியதை திரும்பப் பெறும்வரை எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் திரையுலகில் பணியாற்ற ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று தீர்மானம் போட்டதற்காக நடிகர் சங்கத்துக்கு இ.வா.குட்டு. ஊனமுற்றவர்களை நையாண்டி செய்து காமெடி; பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச நடனங்கள்; போலீஸ், அரசியல்வாதிகளைக் கேவலப்படுத்தும் காட்சிகள்; என்று ஒட்டு மொத்த சமூகத்தையே இழிவுபடுத்தி திரைப்படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று அடுத்தபடி அறிவிக்கும் துணிச்சல் நடிகர், நடிகைளுக்கு உண்டா?( ஓ-பக்கங்கள், குமுதம் )
பாகிஸ்தான் சிறையில் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி உள்ள இந்தியர் சரப்ஜித்சிங்குக்கு விடுதலை கிடைப்பதற்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்நிலையில், சரப்ஜித்சிங்கை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கு பதிலாக இந்திய சிறையில் உள்ள கொடிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாரையும் விடுதலை செய்து விடாதீர்கள் என்று சரப்ஜித்சிங்கின் மனைவி சுக்பிரீத் கவுர், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.எனது கணவருக்காக தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவதை நானோ, என் மகள்களோ விரும்பவில்லை. எங்களை விட நாடு பெரியது. தாயக நலனுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம். எனது கணவரை சந்திக்க அவரது சகோதரிக்கு விசா வழங்குவதுபோல், எனக்கும், என் மகள்களுக்கும் விசா வழங்க வேண்டும்.நிச்சயம் இவரை பாராட்ட வேண்டும்!
Wednesday, March 19, 2008
Chaplin
ஈடு இணையற்ற அறிவியல் மேதை ஐன்ஸ்டீனே தன் வாயால் "என்னைப் போன்ற விஞ்ஞானிகளை விட,சாப்ளின் உயர்ந்தவர்" என பாராட்டிப் பேசியுள்ளார். அப்பேர்பட்ட நகைச்சுவை நடிகரான சார்லிசாப்ளினின் வாழ்க்கை கதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Actor Charlie Chaplin Life history in Tamil pdf ebook Download. Right click and Save.DownloadThanks TamilNenjam!!
Monday, March 17, 2008
Friday, March 14, 2008
Thursday, March 13, 2008
Wednesday, March 12, 2008
thavarukal
மனிதன் தவறுகள் செய்வது சந்தர்ப்பம்
அது போன்ற சந்தர்ப்பத்தை தவிர்ப்பதே ஒழுக்கம்..........................
அது போன்ற சந்தர்ப்பத்தை தவிர்ப்பதே ஒழுக்கம்..........................
Subscribe to:
Posts (Atom)