Wednesday, December 30, 2009

HAPPY NEW YEAR-2010

பேசாத புகைப்படங்கள்என்னோடு பேசுவதாக உணர்கிறேன்

பெருபாலும் புகைப்படங்கள்
என்னை நிறைய சிந்திக்க , எழுத வைக்கின்றன ............
அவை என்னை கவிதை எழுத தூண்டுகிறது
அதன் வண்ணங்கள் என் எண்ணங்களை கிளப்பி விடுகின்றன .......

அவற்றிக்கு என்னாலான ஏதாவதொன்றை எழுதியே ஆக வேண்டும் என்கிற தீர்மானம் அவப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது ......

ஆகவே அடிக்கடி புகைப்படங்களை
பார்த்து கொண்டே என் ஓய்வு நேரங்களை கழிக்கிறேன் ,,,,,,,,,,,,,,,,


தனிமையில் அந்த பேசாத புகைப்படங்கள்
என் மௌனத்தை கலைப்பதாக உணர்கிறேன் .........
என்னோடு பேசுவதாக உணர்கிறேன் ...................................

w3webmedia's second birthday 01-01-2010

வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை முடித்து முத்தான மூன்றாவது ஆண்டில் w3webmedia பயணிக்கிறது ,75 வாடிக்கையாளர்கள் ,25 மாணவர்கள் பயிற்சி ,
50 இளைங்கர்களுக்கும் மேலாக பணிவாய்ப்பு மற்றும் உதவிகள் ,வழிகாட்டி நிகழ்ச்சிகள் ,மொத்தத்தில் கடந்த ஆண்டு மிக சிறந்த ஆண்டு , நிறைய சவால்கள் ,ஏமாற்றங்கள் ,சாதனைகள் ,தனிப்பட்ட வெற்றிகள் ,குடும்பத்தில் நடந்தத நல்ல சுப காரியங்கள் ,நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் ,நீக்கல்கள் ,

புதிய நண்பர்களின் வருகைகள் ,எனது புதிய முயற்சிகளின் வரவேற்புகள் ,என்ன மொத்தத்தில் இந்த 2009 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்த்தது .

வரவேற்கிறேன் 2010 ஆம் ஆண்டை இன்னமும் நிறைய வெற்றிகளை ,மகிழ்ச்சிகளை ,புதிய அனுபவங்களை அள்ளித்தர வேண்டி
2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Monday, December 28, 2009

பள்ளியில் நான் நடித்த நாடகங்களை

பள்ளியில் நான் நடித்த நாடகங்களை மீண்டும் எனக்குள்ளாக அசைபோட வைத்தது அந்த நிகழ்வு ...

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் தொண்டு நிறுவனம் ஒன்று என்னை நடுவராக அழைத்திருந்தது ,
அன்று குழந்தைகள் தினவிழா .
நான்,கவிஞர் சூரிய நிலா ,சென்னை வருவாய் இணை ஆணையர் நந்தகுமார் IRS ,மற்றும் அலுவலர்கள் என நிறைய பேர் அந்த இரண்டுநாள் கலைவிழாவில் கலந்து கொண்டோம் ,

பிள்ளைகள் நடனம் ,பாட்டு,திருக்குறள் ஒப்புவித்தல் ,தனி நடனம் ,குழு நடனம் ,என மொத்தத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களும் குழந்தைகளாக மாறித்தான் போனோம் .

மனதில் அனைத்து கவலைகள் ,வேலை ,நாங்கள் யார் ? ,எங்கள் வயது ,என மொத்தமாய் மறந்து கவலைகள் ஏதுமின்றி அவர்களோடு உண்டு ,விளையாடி ,இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரை நன்றியோடு நினைவு கூர்கிறேன் .


குழந்தைகள் உலகம் மிகவும் விசித்திரமானது கவலை ,கடமை ,சூது ,வன்முறை ,பொறாமை , இவைகளுக்கெல்லாம் அர்த்தம் விளங்காத வயது .

நான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது திருப்பூர் கொடிகாத்த குமாரனாக ,நடித்தேன்.

காங்கிரஸ் குல்லா வேண்டும் என நான் அலைந்து திரிந்தது கடைசியில் ,பள்ளி சீருடை ஒன்றை வெட்டி தைத்து குல்லை ரெடி ஆனது .

திருப்பூர் குமரன் நாடகம் -நான் கொடி பிடித்து கோசம் போட்டு ,தொண்டர்களை வழிநடத்தி செல்லும் போது ஆங்கிலேய காவல்துறை அதிகாரி ஒருவருடன் நீண்ட விவாதம் முடிவில் எனக்கு தலையில் தடியடி.

கொடியை பிடித்தபடி கீழே விழவேண்டும் வெள்ளை சட்டை வெள்ளை வெட்டி ,வெள்ளை குல்லாய் ,மண்ணில் விழுந்தேன் .தேசிய கொடி விழாமல் ,கர கோசம் பட்டையை கிளப்பியது ,சுற்றிலும் தேயிலை தோட்டத்து தாய்மார்கள் ,தந்தைமார்கள் ,சிறுவர்கள் ,

1992 ஆகஸ்ட் மதம் 26 ம நாள் பள்ளியில் நடந்ததது .

அன்று புகைப்படம் எடுத்து வைத்து கொள்ள இயலவில்லை , அடுத்து பாரதியார் ,கட்டபொம்மன் ,மருது சகோதரர்கள் ,வீர சிவாஜி ,என பக்கம் பக்கமாக வசனம் பேசி கைதட்டல்கள் ,எல்லார்க்கும் என் முகம் ,என் பெயர் பிரபலம் ஆனது ,


கடையியாக நான் மேடையில் நடித்தது என்றால் கல்லூரியில் இன்றைய கல்வி திட்ட குறைபாடுகளை ,மனனம் செய்கின்ற யந்திரகளை மட்டுமே உருவாக்கும் கல்வி திட்டம் குறித்த் நாடகம் ,தந்தை வேடம் எனக்கு ,முடித்து விரைவாக கவியரங்கம் ஓடியதாக ஞாபகம் ....

அதன் பிறகு ஒரு குறும்படம் நடித்தேன் temting tragedy நண்பர்கள் வட்டம் அப்போது அதிகம் எப்போதுமே .நிறைய நாடகம் நடித்ததால் நடிக்கும் கலை கைவந்த கலையாகி போனது .

இன்னமும் நடிக்க ஆசை மேடையோ ,திரையோ கிடைத்தால் ஒரு கை பார்க்க ஆசை ,வாழ்க்கை மேடையில் நித்தம் நித்தம் நடித்து ,ஒப்பனை ,உடை ,கலைத்து உறங்கும் பொத்து ஒவ்வொருவரும் நல்ல கைதேர்ந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியுமா ??
ஆக

எல்லோரும் நடிகர்கள்
உலகமே நாடக மேடை --- சேக்ஸ்பியர்

Tuesday, December 22, 2009

ரேணிகுண்டா-டப்பா ஹீரோவா ஜானி ஹீரோவா ??





ரேணிகுண்டா புது பொடியன்கள், புது நாயகன் ,புது நாயகி , ,புது முகங்கள் ,புது டைரக்டர் ,புது மியூசிக் ,என முற்றிலும் புதுமையான,துணிச்சலான கூட்டணி படைத்திருக்கும் ஒளி ஓவியம் ரேணிகுண்டா

தியட்டரில் யதார்த்தமான ,உண்மையான ,ரசிகர் பட்டாளமில்லதா,
நிசப்தங்கள் ,கைதட்டல்கள் ,சிரிப்பலைகள் சந்தித்தது வெகு நாளைக்கு பிறகு இந்த படம் மூலமாகத்தான் .

நல்ல
கதைக்களம் யதார்த்தமான பாத்திர படைப்பு .முன்பகுதி முழுவதும் flashbak என கதை கையாண்ட விதம் அருமை

டப்பா ஹீரோவா ஜானி ஹீரோவா ??

சிறைக்குள் போலீசை மிரட்டும் போதும் ,அனைவரிடமும் நாமெல்லாம் அகிஸ்ட் என மிரட்டும் போதும் ,தன்னை விட நீளமான கட்டையை எடுத்து கொண்டு அடிக்க கிளம்பும் போதும்,போலீஸ் காரரை மிரட்டும் கைதியாக நடித்திருப்பது ,அடிக்கடி கோபபடுவது ,மப்பில் காமெடி பண்ணுவது , பஞ்சங்களை தீர்த்து வைத்துள்ளார் ,புது முகங்களை பார்த்து சில பழைய முகங்கள் மிரளும் கண்டிப்பாக ..................... டப்பா பிரேம் குமார் நல்ல நடிப்பிற்காக நிறைய கை தட்டல்கள் இவருக்குதான்

அடி ஏமண்டி...........பாட்டுக்கு டப்பா பிரேம் குமார் குடுக்கும் பீலிங்க்ஸ் லவ் பன்னதவனையும் லவ் பண்ண வைக்கும்

மழை பாட்டில் நாமும் கூடவே நனைவது போல ஒரு ஈரம் ......கேமரா மேன் மழையை
மழை
துளி வீழ்வதை
படம்
பிடித்திருக்கும் அழகு ,
கையாண்டுள்ள
வண்ண கலவை உலக தரத்திற்கு ஒரு பிடி மாதிரி

ஹீரோயின் காமம் கலக்காத பால்ய காலத்து நடிகை நல்ல தேர்வு .........ஊமையாமே என நம்மை அச்சச்சோ !!!!!!!!!!!!பாவப்பட வைக்கிறார் .........

ரேணிகுண்டாவில் நடக்கும் இருட்டு தொழில்கள்
போலீஸ் சிறைச்சாலை திரைமறைவு சமாச்சாரங்கள் ............
ஈரமில்லாத மறத்து போன காவல் அதிகாரிகள் ...............

கத்தி எடுத்தவர்கள் ஐந்து பெரும் ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுடப்பட்டு சாகும் காட்சிகள் நீதிக்கும் அநீதிக்குமான சாட்சிகள்

இந்த படம் நிச்சயம் வெற்றி படம்தான் நிறைய பேர் இரண்டு மூன்று முறை பார்த்தவர்கள் என தெரிந்து கொண்டேன்

அந்த குண்டு பய்யன் அடிவாங்கி சாகும் தருணங்கள் அனைவரையும் கவலை பட வைக்கிறது ,,,,,புது முகமா திறமை மிளிர்கிறது நால்வரிடமும்

எல்லோரையும் விட பிரேம்குமார் yeun டப்பா கேரக்டர் மனதில் நிற்கிறது
டப்பா சுடப்படும் போது பின்னணி இசை ஒரு குழந்தையை கொள்வதற்கான இசையோடு முடிவது டைரக்டர் டச் ..............

பேசலாமல் புது முகங்களை வைத்தே நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுத்தல் என்ன ???

ஹீரோ கதையை சொல்ல சொல்லி படம் பிடித்திருப்பது புதுமையான
அருமை ....



இந்த படத்தில் அதிகாலை ,மழை ,லேசான வெய்யில் என வண்ணங்களை காட்சிக்கு பொருத்தமாக கலந்து புதுமையான ஒரு வண்ணகோலம் படைத்திருப்பது தொழில் நுட்ப கலைகர்களின் திரை வண்ணம் ..............

இறுதியில் ஹீரோவுக்கு என்று தனியாக வக்காலத்து வாங்காமல் கொஞ்சம் மரணத்தை நீட்டித்து முடிவில் அவரையும் கொன்று காதலியை காத்திருக்க வைத்து முற்று பெறாமல் படத்தை முற்று பெற வைத்திருக்கும் இயக்குனர் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்

மொத்தத்தில் நல்ல படம் ஒருமுறை தியேட்டர் போய் பாருங்கள் நண்பர்களே

நான் சொன்னதெல்லாம் உங்களுக்கே விளங்கும்

வேட்டைக்காரன்=மொக்கை கத்திக்காரன்






வேட்டைக்காரன் படத்திற்கு ரெண்டு டிக்கெட் கிடைச்சிருக்கு படம் இன்னைக்குத்தான் ரிலீசு வர்றியா ???
ன்னு ஒரு போன் கால் சரின்னு நம்பி.............. போனேன்


சன் டிவி, கே டிவி, சுட்டி டிவி ,சன் மியூசிக், வேற கால்ல்ல விழுந்து பிச்சை எடுக்காத குறையா ட்ரைலர் அடிக்கடி
எல்லா சேனல்லையும் போட்டு டார்ச்சர் பண்ணி

சன் பிச்சர்ஸ் வெளியிடும் படம் பாக்காட்டி ரேஷன் கார்டு
,அரிசி ,மண்ணெண்ணெய் , ஒன்னும் கிடையாதுன்னு அறிவிப்பு வந்தாலும் வரலாம் எச்சரிக்கை !!!!!!!!!!!!!!!!!!


நல்ல வேலை மண்டைல மூளைய பத்திரமா கழட்டி வச்சிட்டு போனேன்


படம் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரைக்கும் லாஜிக் + கதையில்லாமல் படம் பார்க்கும் ஒரே பரபரப்பு விறுவிறுப்பு


விஜய் இன்ட்ரோ சங்கு சாரி சாங்கு

நான் அடிச்ச தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட பாட்டுக்காக இவருக்கு போலீஸ் வேலை தரலாம்
விஜய் இன்ட்ரோ பைட்டு

இங்க ஊர்ல பழைய சுவர் ,கட்டிடம் உடைக்கனும்ன விஜய கூப்பிடலாம் காங்க்ரீட் கல்லுல ஒரு குத்துல உடைப்பார் பாருங்க ,எனக்கு ஒன்ஸ்மோர்
அதாங்க ஒன்ஸ் வந்திருச்சி


விஜய்
டயலாக்

இந்த படத்தில் பரவாயில்லை முன்பு குருவி படத்தில் செய்த தவறை திருத்தயுள்ளர்
விஜய் அல்லக்கை காமெடியன்ஸ் ஜால்ராஸ்

பாவம் திறமை இருந்தும் இந்த படத்தில் அவர்கள் பயன்படுத்தபடாமல் விட்டிருக்கிறார்கள்
ஹீரோயினி இண்ட்ரோ பிட்டு


ஹீரோயின் வயசாகி அக்க ரோல்ல நடிக்கும் முன்பாக படம் வெளியானதால் சில நண்பர்கள்
அருந்ததி anusgavirgaga படம் பார்க்க வந்திருப்பதாக சொன்னார்கள்

லவ்
சாங் நாலு

விஜய் அன்டோனி விஜய்க்காக மியூசிக் பண்ணியிருக்கிறார் பரவாயில்லை பாட்டு படத்தை காப்பாத்தும்

சண்டை மூணு

ஹீரோவின் மூன்று அடிவங்கல்களுக்கு பிறகு வழக்கம் போல இருபது முப்பது பேரை தனியாளாக நின்று அடித்து துவைப்பது பாவம்ப்பா stunt aartistgal


அவ்வளவே படம் அளவாக பண்ணி சாரி பின்னியிருக்கிறார்கள்

விஜய் பள்ளி பிளஸ் டு மாணவராக அறிமுகமாகி
கல்லூரி மாணவராக இதில் நடித்திருப்பது நகை சுவை காட்சிகள்( ஏய் சிரிங்கப்பா பின்னல் இருக்கையில் இருந்து நக்கல்ஸ் )

ஆட்டோ ஓட்டுகிறார் அடிதடி பண்ணுகிறார் வழக்கம் போல படிக்க வில்லை

அதன் அடிக்கிறார் இல்ல ................கல்லூரியில் காதல் வராமல் கல்லூரிக்கு வெளியே காதல் வருவது புதுமை

இத்தனைக்கு மேலாக இடைவேளை இடைவெளி இல்லாமல் ஆளாளுக்கு வசனம் பேசி ,பஞ்ச் டயலாக் பேசி கொன்னு குத்துயிராக சில பேர் தூங்கி வழிந்தார்கள்
அவ்வப்போது ஹீரோயின் அக்கா வந்து எழுப்பி விட்டாக .....
நானும் இந்த படத்தில் நடிச்சிருக்கேன் ஞாபகபடுத்தி போனாக ..........


இளைய தளபதி விஜய் ரசிகர்கள் தான் பாவம் மொத்தமாக குழம்பி திரிவார்கள்

போலீஸ் வேலைக்கு போலாமா??
வேண்டாமா ? ஒன்னும் புரியல

இடை வேளைக்கு முன்னால போலீஸ்
பின்னாடி ரவுடி முள்ளை முள்ளால் புடுங்கும் ஹீரோ விஜய்

இளிச்ச வாய் வில்லன் பொறுமையாக தானாக சின்னபுள்ளதனமாக அடிவாங்கும் பொறுமையான வில்லன் எவ்வளவு அடிச்சாலும் வாங்குறான் இவன் ரொம்ப நல்லவனொன்னு நினைக்க வைப்பதை டைரக்டர் திறமை ன்னுதான் சொல்லணும்

எங்க கைப்புள்ள கூட இப்படி அடிவாங்கினது இல்லல ????????


ஆக அடிக்கடி அனைவரும் பஞ்சத்துக்கு பன்ஜ் பேசி கொல்லும் படம்

விஜய் அருவியில் குதிப்பதை அபோகளிப்டவிலும் காப்பியடித்த டைரக்டர் பின்னணி மியூசிக் கோடா திருடியிருப்பது கேவலம் ....................... திருட தெரியாதவன் கூட இப்படி அப்பட்டமாக திருடிய ஸீன் +மியூசிக் பின்னி எடுக்கிறார்

கிளைமாக்ஸ் இந்திய வரலாற்றில் குருடன் கையில் துப்பாக்கி தந்து வில்லனை கொன்றோலிப்பது புதுமை



நம்ப முடியவில்லை கை தட்ட யாருமில்லை
காரி துப்பவும் முடியவில்லை இங்கே எச்சில் துப்பதீர் என்று அறிவிப்பு இருந்ததால்

இறுதியாக

வேட்டைக்காரன் நம் கண்களையும் காதுகளையும் பதம் பார்க்கும்
மொக்கை கத்திக்காரன்

தல அஜித் அடுத்த அட்டாக்அசல் வரும்வரை பொறுத்திருப்போம் ....................

Thursday, December 17, 2009




புத்தன் தமிழனாக பிறந்திருந்தால் அவனும் இந்நேரம் முள்வேலிக்கு பின்னால் சிறைபட்டிருப்பான்



Wednesday, December 16, 2009

தெரியவில்லை

இவர்கள் சொர்கத்தை கேட்கவில்லை
நரகம் வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் .................
இவ்வளவு அவமானமும் வேதனையும் அவர்களை இன்னமும் எத்தனை காலம் வைத்திரும்ம்குமோ ????
தெரியவில்லை
















Tuesday, December 8, 2009


சின்னஞ்சிறுசுல எல்லாரும் வன்மம் பயம் இல்லாமதன இருந்தோம்

இப்ப மட்டும் ஏன் ????
வளர வளர தாழ்ந்து போகும் மன நிலை ஏன் ???