Wednesday, July 31, 2013

ஏற்கனவே இறந்து விட்டவன்.

அறையெங்கும் பரவியிருக்கும் புகை மண்டலம்...
ஆறாவதாய் விரலில் நகர்ந்து முன்னால் விழும் சாம்பல்....
என் மரணத்தை ஒரு வேளை முன் கூட்டியே அறிவிக்காமலும் இருக்கலாம்.....
இந்த கடிதம் உரிஞுசும் பேனா மை போல என் உயிர் நாட்கள்,
துளி துளியென உரிஞசப்பட்டு உலரத்துவங்கிவிட்டது,
ஆரம்ப நாட்களில் புகைப்பழக்கம் ஒரு சாகச சந்தோசத்தை அளித்தது...
நண்பர்களிடம் சிறு உயரத்தையும்......
பின் கன்னியர்களிடம் ஒரு புன்னகையயை....நான் மிகவும் விரும்பும் நடிகனின் பிம்பத்தை...
என் வெறுமையான பக்கங்களை அது நிரப்புவதாய் ....
தனிமயை கரைப்பதாய்...கற்பனையை வளர்ப்பதாய் ,,,,போலியாக நம்ப ஆரம்பித்தேன்...
ஆரம்பத்தில் காலையில் ஒன்று, தேநீருக்கு ஒன்று, மதிய உணவிற்கு பிறகு ஒன்று, இரவு தூங்கும் முன் ஒன்று,
ஒன்று இரன்டானது  ,பின் மூன்றானது,,எண்னிக்கை தெரியவில்லை நேரத்திரற்கு ஒன்று என்றானது,,,,,,
புகைப்பழக்கம் எனக்கடிமையாக இருந்த காலம் மெல்ல மெல்ல மாறி
அதற்கு அடிமையாய் நான் மாறினேன் பின்னொரு நாளில் ......
கூடவே மதுவும் வந்தது ..பல நேரஙகளில் என்னுடைய அனுமதி பெறாமலேயே
இரைப்பையை மதுவும் ,நுரையீரலை புகையும் ஆக்கிரமித்தன ,
ரத்தம் முழுக்க ஆல்ஹகாலும் ,நிக்கோடினும் மாறி மாறி கலந்தது.
உதடு கறுத்து பற்கள் கறையேறி நெஞுசுகூடு தூக்கி ...நடக்க உடல் வலுவின்றி நடு நடுங்க மயக்கமுற்று
ரத்தம் கக்கி வாந்தி எடுத்த போது தெரியவந்தது புற்று நோய் என்னை விழுங்கி கொண்டிருப்பது ...
மருத்துவ பரிசோரதனை புற்று நோயை உறுதி செய்த்து...நோய் முற்றி விட்டது என்றார்கள் மருத்துவர்கள்.
சிகிச்ச்சை பலனலளிக்காமல் இறப்பின் நாட்களை எண்ணி கொண்டிருக்கும் நொடிகள் மிக கணமானது கொடூரமானது.....
இறந்து பொவேன் எனதெரிந்தால்  ,இன்னமும் வாடகை வீட்டில் வசிக்கும் என் ஒருவனின் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும்
அன்பே வடிவான என் மனைவி,அழகே உருவான  இரன்டு மகன்கள் ,வயதான அப்பா, அம்மா இவர்களின் கதி என்னாவது.
நம்மை மெல்ல கொல்லும். மரண்த்தை விரைவில் கூட்டிவரும் ,குடும்பத்தை அனாதையாக்கி நடுதெருவில் நிறுத்தும்.
  
மது/புகை குடிக்கும்/பிடிக்கும் ஒவ்வொரு நொடியும் நம்முடைய உயிர் குடிக்கபடுகிறது
வேண்டாம் புகை பழக்கம் மது பழக்கம்

இப்படிக்கு
இன்று, நாளை, அல்லது மற்றொரு நாளில் மரணிக்க காத்திருக்கும் ஏற்கனவே இறந்து விட்டவன்.

No comments: