Thursday, October 1, 2009

கிராமத்தில் வளர்ந்தது திரிந்த என் பால பருவம்

வாய்க்கால் மீன்கள்
கிணற்று குட்டிகரனக் குளியல்
நெருப்பில் சுட்ட மண் வேர்கடலை ,கப்ப கிழங்கு
திருட்டு இளநீர் ,தேங்காய்
ஒடித்த கரும்பு
கல்லெறிய காய்த்திருக்கும் மாமரம்
பழுத்து கொட்டிகிடக்கும் நாவல் பழ மரம்
நுங்கு அமுது தரும் பனைமரம்
புழுதி பறக்கும் கபடி விளையாட்டு
நில வெளிச்ச முற்றத்து முதியோர்களின் கதை புராணங்கள்
அம்மியில் அரைத்த ,
உரலில் இடித்த ,
ஆட்டுரலில் ஆட்டிய ,
விறகடுப்பில் வெந்த
பனை விசிறி
பாட்டியின் முந்தானை
கிராமத்தில் வளர்ந்தது திரிந்த என் பால பருவம்

சாலையோரம் பயணம் செய்யும் ஜன்னல் வழியாக பசுமையாக விரியும் ............................

No comments: