Friday, September 25, 2009

காட்டு பூ


காட்டு பூ தன் பாட்டுக்கு பூக்கிறது
மணம் சேர்க்கிறது
மாலைக்குள் சிக்காமல்
மயிருக்குள்
சிறைபடாமல்
மனிதகரங்களால் கரை படாமல்
பூக்கிறது
நிதமும்
வண்டுகளும்
பறவைகளும் தேனுண்ண
வண்ணத்து பூச்சிகளும் மட்டும் மகரந்த சேர்க்கை நடத்த
யாரும் எதிர்பார்ப்பதில்லை
யாரும் நீருற்றவில்லை
பறிக்க
யாருமில்லை ......................
போதிலும் நிதமும் பூக்கிறது......... பூத்து கொண்டே இருக்கிறது ...........................

No comments: