Tuesday, December 22, 2009

ரேணிகுண்டா-டப்பா ஹீரோவா ஜானி ஹீரோவா ??





ரேணிகுண்டா புது பொடியன்கள், புது நாயகன் ,புது நாயகி , ,புது முகங்கள் ,புது டைரக்டர் ,புது மியூசிக் ,என முற்றிலும் புதுமையான,துணிச்சலான கூட்டணி படைத்திருக்கும் ஒளி ஓவியம் ரேணிகுண்டா

தியட்டரில் யதார்த்தமான ,உண்மையான ,ரசிகர் பட்டாளமில்லதா,
நிசப்தங்கள் ,கைதட்டல்கள் ,சிரிப்பலைகள் சந்தித்தது வெகு நாளைக்கு பிறகு இந்த படம் மூலமாகத்தான் .

நல்ல
கதைக்களம் யதார்த்தமான பாத்திர படைப்பு .முன்பகுதி முழுவதும் flashbak என கதை கையாண்ட விதம் அருமை

டப்பா ஹீரோவா ஜானி ஹீரோவா ??

சிறைக்குள் போலீசை மிரட்டும் போதும் ,அனைவரிடமும் நாமெல்லாம் அகிஸ்ட் என மிரட்டும் போதும் ,தன்னை விட நீளமான கட்டையை எடுத்து கொண்டு அடிக்க கிளம்பும் போதும்,போலீஸ் காரரை மிரட்டும் கைதியாக நடித்திருப்பது ,அடிக்கடி கோபபடுவது ,மப்பில் காமெடி பண்ணுவது , பஞ்சங்களை தீர்த்து வைத்துள்ளார் ,புது முகங்களை பார்த்து சில பழைய முகங்கள் மிரளும் கண்டிப்பாக ..................... டப்பா பிரேம் குமார் நல்ல நடிப்பிற்காக நிறைய கை தட்டல்கள் இவருக்குதான்

அடி ஏமண்டி...........பாட்டுக்கு டப்பா பிரேம் குமார் குடுக்கும் பீலிங்க்ஸ் லவ் பன்னதவனையும் லவ் பண்ண வைக்கும்

மழை பாட்டில் நாமும் கூடவே நனைவது போல ஒரு ஈரம் ......கேமரா மேன் மழையை
மழை
துளி வீழ்வதை
படம்
பிடித்திருக்கும் அழகு ,
கையாண்டுள்ள
வண்ண கலவை உலக தரத்திற்கு ஒரு பிடி மாதிரி

ஹீரோயின் காமம் கலக்காத பால்ய காலத்து நடிகை நல்ல தேர்வு .........ஊமையாமே என நம்மை அச்சச்சோ !!!!!!!!!!!!பாவப்பட வைக்கிறார் .........

ரேணிகுண்டாவில் நடக்கும் இருட்டு தொழில்கள்
போலீஸ் சிறைச்சாலை திரைமறைவு சமாச்சாரங்கள் ............
ஈரமில்லாத மறத்து போன காவல் அதிகாரிகள் ...............

கத்தி எடுத்தவர்கள் ஐந்து பெரும் ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுடப்பட்டு சாகும் காட்சிகள் நீதிக்கும் அநீதிக்குமான சாட்சிகள்

இந்த படம் நிச்சயம் வெற்றி படம்தான் நிறைய பேர் இரண்டு மூன்று முறை பார்த்தவர்கள் என தெரிந்து கொண்டேன்

அந்த குண்டு பய்யன் அடிவாங்கி சாகும் தருணங்கள் அனைவரையும் கவலை பட வைக்கிறது ,,,,,புது முகமா திறமை மிளிர்கிறது நால்வரிடமும்

எல்லோரையும் விட பிரேம்குமார் yeun டப்பா கேரக்டர் மனதில் நிற்கிறது
டப்பா சுடப்படும் போது பின்னணி இசை ஒரு குழந்தையை கொள்வதற்கான இசையோடு முடிவது டைரக்டர் டச் ..............

பேசலாமல் புது முகங்களை வைத்தே நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுத்தல் என்ன ???

ஹீரோ கதையை சொல்ல சொல்லி படம் பிடித்திருப்பது புதுமையான
அருமை ....



இந்த படத்தில் அதிகாலை ,மழை ,லேசான வெய்யில் என வண்ணங்களை காட்சிக்கு பொருத்தமாக கலந்து புதுமையான ஒரு வண்ணகோலம் படைத்திருப்பது தொழில் நுட்ப கலைகர்களின் திரை வண்ணம் ..............

இறுதியில் ஹீரோவுக்கு என்று தனியாக வக்காலத்து வாங்காமல் கொஞ்சம் மரணத்தை நீட்டித்து முடிவில் அவரையும் கொன்று காதலியை காத்திருக்க வைத்து முற்று பெறாமல் படத்தை முற்று பெற வைத்திருக்கும் இயக்குனர் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்

மொத்தத்தில் நல்ல படம் ஒருமுறை தியேட்டர் போய் பாருங்கள் நண்பர்களே

நான் சொன்னதெல்லாம் உங்களுக்கே விளங்கும்

No comments: