Friday, January 8, 2010

அரசு துவக்க பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் அண்ணா பல்கலைகழக கணிப்பொறியியல் வரை

ஜாரே தமீன் பார் மற்றும் த்ரீ இடியட்ஸ்

இரண்டு படங்களை பார்த்தல்


நமது கல்வி முறையின்
குறைபாடுகளை சுட்டி காட்டும் படங்களாக வந்திருப்பது ,அப்பட்டமாக தெரியும் ஆறுதலான விஷயம் .வாழ்த்துகள்


ஆனால் நமது கல்வித்துறை புலிகள் அதெல்லாம் டூப்பு நாம தான் டாப்பு
என்று ஆங்கிலேயன் நமது நாட்டை விட்டு போன போது விட்டு சென்ற பழைய்ய்ய மெக்கல்ல கல்வி முறையை தொங்கி அதனால் மாணவர்களின் தலை வீங்கி கொண்டிருப்பது காலத்தின் கொடுமை ,,



மோசமான அடிமை கல்விமுறை
நிரம்ப நினைவு திறன் வளர்ப்பதாக மட்டுமே உள்ளதை யாராலும் மறுக்க முடியாது (படிக்க மறக்க மீண்டும் படிக்க மறக்க )

அரசு துவக்க பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் அண்ணா பல்கலைகழக பொறியியல் கணிப்பொறியியல் வரைக்கும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இந்த மனனம் செய்தல்
போட்டியில் தொடர்ந்தது முதல் மதிப்பெண் ,முதலிடம் வாங்க போராட்டம் ,,,,,,,,,,,


தாளில் எழுதுதல் பின்னர் மறந்து போக செய்தல் மீண்டும் மனனம் செய்தல்
அடுத்த தேர்வு ,அடுத்த பாடம் ,அடுத்த வகுப்பு ,


இப்போது உங்களில் நிறைய பேருக்கு தொடர்ந்தது
ஒரு பத்து திருக்குறள் சொல்ல இயலுமா ??


,பள்ளியில் படித்த ஆங்கில பாடல் வரிகளை பாட இயலுமா ??

,ஒம் விதி??
,நியூட்டனின் விதிகள் ?
OSI SEVEN LAYERS ???



சத்தியமாக தெரியாது .

படித்தல் பின்னர் மறக்கவும் ,மீண்டும் படிக்கவும் தயாராகுதல் என்பது தான் போதிக்க பட்டது ,கட்டயபடுத்தபட்டது , வகுப்பில் முதல் மாணவனாக வர இந்த தகுதிகள் போதுமானவையாக இருந்தது .

கல்லூரியில் நீண்ட ப்ரோக்ராம் வரிசைகளை,கணிதத்தின் வரிகளை ,ஏன் விடைகளை கூட மனனம் செய்யும் புலிகளை நண்பர்களாக கண்ட போது அதிர்ந்தே போனேன் .

கல்வி கூடத்தின் பதினேழு ஆண்டுகளில் உண்மையை சொல்வதானால் நல்ல முறையில் சுயமாக ஒரு கண்டுபிப்பும் செய்ய வில்லை ,படிக்கவும் இல்லை ,

மாநில ,மாவட்ட அளவில் கவிதை ,கட்டுரை என பரிசு பெற்றதே சாதனை என சொல்ல வேண்டும்,

தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் ,என்று மட்டுமே நிர்பந்திக்க பட்டேன் ,

கற்பனைகளை கட்டுரைகள் ,சிறுகதைகள் ,கவியரங்கம் , திரையரங்கம் ,நாடக மேடைகள் என நிறைய செலவிட்டேன் , அதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய்ய்ய எதிர்ப்பை திணித்தார்கள் ......

கவிதை எழுத தமிழ் மொழியை கொஞ்சம் வசபடுத்தி கொண்டேன் ,உலக இலக்கியம் ,கவிதைகள் ,எழுத்தாளர்கள் என என்னை நானே நிரப்பியதன் விளைவே இந்த வலைப்பூ ....பதிவுகள்

பதினேழு ஆண்டுகளை கல்வி கூடங்களில் நான்கு சுவர்களுக்குள்
வீண் செய்து விட்டோமே!! என்ற குற்ற உணர்ச்சியும் எனக்கு உண்டு .

பின்னர் முதல் வகுப்பில் பட்டம் பெற்று ,நண்பர்கள் ஆரம்பித்த நிறுவனத்தில் வேலை பார்த்து .....
அங்கிருந்து கிளம்பி அதை போலவே சுயமாக ஒரு நிறுவனம் அமைத்து இப்படியாக ஒரு ஐந்து ஆண்டுகள்,,,,,,,,,,

நிம்மதியாக ,சுயமாக ,சுதந்திரமாக ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு

சில மாதங்கள் மட்டுமே படித்த வலைதள வடிவமைப்பு மென்பொருள் பயிற்சி மட்டுமே உதவியது ,உதவப்போகிறது .....என்பது தான் உண்மை .


இப்போது வார இறுதிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க சில கல்லூரிகளுக்கு செல்வதுண்டு இன்னமும் அதே மனனம் செய்யும் எந்திரங்களை காணும் போது மனம் வலிக்கிறது ............

ஏதோ சமச்சீர் கல்வி அது இதுன்னு சொல்லி கொள்கிறார்கள் .வந்தால் பரவாயில்லை பார்க்கலாம் .வரவிட மாட்டார்கள் போல . கல்வி கொள்ளையர்கள் பல பேர் இந்த நாட்டில் .


மாணவர்களை
புதியனவற்றை ,கண்டுபிக்கவும்,
சுயமாக படைப்பு திறனை ஏற்படுத்தவும்
தவறுகின்ற கல்வி முறையில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை ,

வீட்டில் இருந்ததே படித்து பட்டம் பெறுவது ,
கல்லூரி சென்று படித்து பட்டம் பெறுவது இரண்டும் ஒன்றா ??????????

நன்றாக இல்லை .கல்வி கட்டணத்தை,, நேரத்தை வேண்டுமானால் மிச்சம் செய்யலாம் ,,,,,அனுபவங்களை உங்களால் பெறவே முடியாது .
மேற்கத்திய அறிஞர்கள் ,விஞ்ஞானிகள் ,மேலாண்மை ,பொறியியல் ,மருத்துவம் ,என


யாரோ எழுதியவற்றை
நாமே எத்தனை நாள் தான் படித்து கொண்டிருப்பது .
மனனம் செய்து தேர்வுத்தாளில் மதிப்பெண் வேண்டி எழுதி தள்ளுவது .

புதிதாக எப்போது நீ எழுதுவது ......

..அதை எப்போது யார்??
படிப்பது என்பதல்லவா கேள்வி ????


அரசு ,கல்வி நிறுவனங்களின் மூலம் பணம் பார்க்க தொலை தூர கல்வி முறையை அமைத்து அவர்களை படிக்க வைத்து எழுத வைத்து பின்னர் மதிப்பெண் போட்டு பட்டம் தந்து வேலையை தராத இந்த கல்வி முறை எப்போது மாறும் ....

அறிவியல் ,பொறியியல் கண்டு பிடிப்புகள் இந்தியாவிலும் வருவதற்கு வாய்ப்பளிக்கும் கல்விதிட்டம்தான் தேவை


மேற்கண்ட எழுத்துகள் யாவும் எனது சொந்த அனுபவங்கள்
உங்களுக்கானது அல்ல .......


அனுபவங்களும் பகிவுகளும் தொடரும் ...............

No comments: