என்ன எழுதுவது ??
என்று நீண்ட நாள் யோசித்த பிறகு
என்னையே எழுதி விடுவது என்பது தீர்மானித்தேன் ....
என் அனுபவங்கள் ,கடந்து வந்த பாதைகள் ,மனிதர்கள் ,சம்பவங்கள் , இப்படி நிறைய எனது பால்ய பருவங்கள் முழுக்க முழுக்க அனுபவங்களால் முற்றி நிரம்பி வழிகிறது ,,,,,,
சிறு வயது முழுக்க,இயற்கையான காற்று , மழை பிரதேசம் ,அடர்ந்த காடுகள் ,தேயிலை தோட்டம் ,பலா,மா ,நாவல்பழ ,பேரி ,
,ஆரஞ்சு தோட்டம் ,தேன் கூடு, என முழுக்க முழுக்க இயற்கை மதியி தவழ்ந்து வளர்ந்த நாட்கள் ...........புத்தகம் படிப்பது கூட உயர்ந்த பாறை அல்லது மரக்கிளை
இப்போது லேப்டாப்பில் நினைத்தால் சிரிப்பு வருகிறது ,சில நேரம் அழுகையும் வருகிறது ,மரமேறி சில வருடங்களா இருக்கும் , தலையில் சுமை சுமந்து பல நாட்கள் ஆகிறது ,,,,,,நெடுதூரம் க்காட்டு வழி நடந்து வெகு நாட்கள் ஆகிறது .......
கல்லூரி படிக்க வேண்டி காங்குரீட் நகர கட்டிட நகருக்குள் சிறை பட்ட நாட்கள் ,காற்று முதல் நீர் வரை எல்லாமே அழுக்கு, அமிலம் கலந்துதான் .
வேகமான நாகரீகம் அவசர துரித உணவு ,எல்லாம் பாக்கெட் அடைத்த மனிதனாய் உணர்ந்த நாட்கள் அவை ......
படித்து முடித்து வேலை தேடி அலைந்து ,சென்னை இன்னொரு நரகம் பேரிரைச்சல் ,முன்னம் பாதி பின்னம் பாதி வேகமாக அசுர கதியில் இயங்கும் இயந்திர மனிதர் கூட்டம் ,இயல்பை தொலைத்து இயந்திரமயமான வாழ்க்கை பிடிக்காமல் மீண்டும் கோயம்புத்தூர் வந்து செட்டில் ஆகி
வியாபார துறை அதுவும் விற்பனை பிரிவில் ,சாதாரண மனிதர்கள் முதல் சாமானியர்கள் வரை சந்தித்த அனுபவங்கள் மிகவும் விசித்திரமானது
நிறைய மனிதர்கள் சந்திப்பு ,சண்டைகள் ,சமாதானங்கள் ,சமரசங்கள் ,
என நீளும் இந்த வரிசையில் எழுதுவேன் என்னை ...................
Friday, January 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment