Monday, January 11, 2010

என் ஞாயிறுகள்

என் ஞாயிறுகள்
சனி ஞாயிறு விடுமுறைஎன்பதால் வெள்ளிகிழமை மாலை வீட்டிற்கு குதூகலத்துடன் பள்ளியை விட்டோடும் மாணவனை போல்

சனிக்கிழமை பொன் மாலை பொழுதின் நிமிடங்களில்
ஆரம்பிக்கிறது வீட்டிற்கு செல்வதான பயணம்..............


வளைந்து நெளிந்த கொண்டை ஊசி வளைவுகளின்
ஊடே எறும்பின் வேகத்தில்
மலையேற்ற அரசு பேருந்து பயணத்தில்
நள்ளிரவின் இருளை பிரித்து பயணம்
பேருந்து வானொலியில் பழையா பாடல்களை கேட்டவாறு மனம் மட்டும் பின்னோக்கி பயணிக்கிறது ..................

எப்படியேனும் கிடைத்து விடுகிறது
எனக்கு மட்டும் எளிதில் பேருந்து ஜன்னலோரம் ,,,,,,,,

ஜன்னல் திறந்தால் நடுங்கும் குளிரிலில் நீள்கிறது பயணம்
ஊர் வந்து நிறுத்தம் தாண்டியும் ஓடும் பேருந்தில்
இருந்து குதித்து இறங்கி ஓடி பின் நின்று
ஏற்றத்தில் மூச்சிரைக்க ஏறி கதவை தட்டி

முதிர்ந்த என் பெற்றோரால் கதவு
திறக்கும் பொழுது ஞாயிறு விடிந்து விடுகிறது ............

எனக்கான தேநீரும் ,இரவு உணவும் காத்திருக்கும் அடுப்படியில் ..............

No comments: